உடல் நலம் குன்றியிருக்கும் திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்களில் தொடர்ந்து கலந்து கொண்டு சிறப்பிக்கும் மாவட்ட மகளிரணித் தலைவர் பி.என்.ஆர். அரங்கநாயகி அம்மாவை பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை, திராவிடர் கழகத் தோழர்கள், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் சந்தித்து நலம் விசாரித்தனர். மேலும் குடும்பத்தினருடனும் கலந்துரையாடி அம்மா உடல் நலன் குறித்து கேட்டறிந்தனர். பி.என்.ஆர். அரங்கநாயகி அம்மாவை தமிழர் தலைவர் ஆசிரியர் தம்மை நேரில் சந்தித்து நலம் விசாரித்தமையை நெகிழ்வுடன் கல்லூரி முதல்வரிடம் கூறி மகிழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குமரி மாவட்ட கழகம் சார்பாக நாகர்கோவில் மாநகரப் பகுதி மற்றும் வடசேரி பகுதியில் திண்ணைப் பிரச்சாரம் நடைபெற்றது. கழக மாவட்ட கழகத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். கழக மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் பரப்புரையைத் தொடங்கி வைத்தார். காப்பாளர் ம.தயாளன், துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள், பொதுக்குழு உறுப்பினர் மு.இராஜசேகர், கழக மாவட்ட மேனாள் அமைப்பாளர் ஞா.பிரான்சிஸ், கோட்டாறு பகுதி தலைவர் ச.ச.மணிமேகலை, குமரி நகர செயலர் க.யுவான்சு, தோழர்கள் குமரிச் செல்வன், முத்துவைரவன், ச.ச.தமிழரசன் பங்கேற்றனர். தந்தை பெரியாருடைய கொள்கை நூல்கள், தூண்டறிக்கைகள், கழக தலைவர் கி.வீரமணி அவர்களுடைய நூல்கள் மக்களுக்கு வழங்கப்பட்டன.
