இந்நாள் – அந்நாள்

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

‘சிந்தனைச் சிற்பி’ ம. சிங்காரவேலர்
நினைவு நாள் இன்று (11.02.1946)

தமிழ்நாட்டின் பொதுவுடைமை இயக்கத்தின் முன்னோடியாகவும், சிறந்த சிந்தனையாளராகவும் திகழ்ந்த “சிந்தனைச் சிற்பி” சிங்காரவேலர் மறைவு நாள் இன்று (11.2.1946).

இந்தியாவில் முதன்முதலில் (1923, மே 1) உழைப்பாளர் நாளைக் கொண்டாடியவர் இவரே.

பெரியாரின் ‘சுயமரியாதை இயக்கத்தில்   சமதர்மக்  கொள்கையையும் இணைத்து தனது அரசியல் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளை ‘ஈரோடு திட்டம்’ என்ற பெயரில் வெளியிட்டது. அதில் பெரும் பங்காற்றியவர் சிங்காரவேலர்.

‘குடிஅரசு’ இதழில் சிங்காரவேலர் தொடர்ந்து அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதாரக் கட்டுரைகளை எழுதி வந்தார்.

“உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்” என்ற முழக்கத்தைத் தமிழ்நாட்டில் உரக்கச் சொன்னவர் சிங்காரவேலர். அவரது நினைவைப் போற்றும் வகையில்  சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு “சிங்காரவேலர் மாளிகை” என்று தமிழ்நாடு அரசு பெயர் சூட்டியுள்ளது. அவரது புத்தகங்களை பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வெளியிட்டுப் பரப்பி வருகிறது.

இந்நாள் - அந்நாள்

 

‘தமிழ் மாணவன்’ ஜி.யு. போப்  நினைவு நாள் இன்று (11.02.1908)

தமிழ் மொழியின் மீது கொண்ட பற்றால் தன்னை ஒரு “தமிழ் மாணவன்” என்று அழைத்துக்கொண்ட பெருமகனார்  ஜி.யு. போப்.

திருக்குறள், திருவாசகம் மற்றும் நாலடியார் போன்ற தமிழ் இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, உலகறியச் செய்தவர். : தனது கல்லறையில் “இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக்கொண்டிருக்கிறான்” என்று எழுதப்பட வேண்டும் என்று விரும்பியவர்.

அவரின் 118ஆவது நினைவு நாள் இன்று (11.2.2026)

அறிவியலில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான பன்னாட்டு நாள்  – (11.2.2015)

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் பெண்களின் பங்களிப்பை அங்கீகரிக்கவும், பாலின சமத்துவத்தை நிலைநாட்டவும் அய்க்கிய நாடுகள் சபை (UN) 2015ஆம் ஆண்டு முதல் ஒவ்வோராண்டும் பிப்ரவரி 11-ஆம் தேதியை  “அறிவியலில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான பன்னாட்டு நாள்” ஆகக் கொண்டாடப்படும் என்று அறிவித்தது.

அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) ஆகிய துறைகளில் பெண்கள் இன்னும் குறைவான அளவிலேயே உள்ளனர். இந்த இடைவெளியைக் குறைப்பதே இந்நாளின் முக்கிய நோக்கமாகும்:

மேரி கியூரி முதல் இன்றைய விண்வெளி ஆய்வாளர்கள் வரை அறிவியலில் பெண்களின் சாதனைகளை நினைவு கூர்தல்.

சமூக,  பொருளாதார ரீதியாக பெண்கள் அறிவியல் துறைக்குள் நுழைவதற்கு இருக்கும் தடைகளை நீக்குதல்.

வருங்காலத் தூண்களான சிறுமிகளுக்கு அறிவியல் மீதான ஆர்வத்தைத் தூண்டி, அவர்களை ஆராய்ச்சியாளர்களாக மாற்ற வழிகாட்டுதல்.

அறிவியலுக்குப் பாலினம் இல்லை; திறமைக்கும் ஆர்வம் இருக்குமிடத்தில் முன்னேற்றம் தானாக வரும்.

தற்போது விண்வெளி ஆய்வு, மருத்துவ ஆராய்ச்சி,  செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற துறைகளில் பெண்கள் முத்திரை பதித்து வருகின்றனர். இருப்பினும், உயர்கல்வியிலும், ஆராய்ச்சிப் பணிகளிலும் உலகளவில் பெண்களின் விகிதம் சுமார் 30% என்ற அளவிலேயே உள்ளது. இதனை அதிகரிக்க அரசாங்கங்களும் கல்வி நிறுவனங்களும் பல்வேறு உதவித்தொகைகளையும் திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றன.

சிறுமிகளுக்குச் சரியான வாய்ப்பும், ஊக்கமும் அளிக்கப்பட்டால், அவர்கள் உலகை மாற்றும் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கு வார்கள் என்பதில் அய்யமில்லை.

 

 

 

 

 

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *