பிள்ளைகளின் படிப்புக்கு பணம் திரட்ட ஆயுள் கைதிக்கு விடுப்பு

1 Min Read

சென்னை, நவ. 26- பிள்ளைகளின் படிப்பு செலவிற்கு பணம் திரட் டுவதற்காக ஆயுள் தண்டனை கைதிக்கு விடுப்பு  வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

ஈழத் தமிழர் போராட்டத்தை ஆதரித்து ரயில் மறியலில் ஈடு பட்டது தொடர்பாக கியூ பிரிவு காவல்துறையினர் பதிவுசெய்த வழக்கில், கடலூரை சேர்ந்த செந்தில்  குமாருக்கு ஆயுள் தண் டனை விதிக் கப்பட்டது. இந்த சூழ்நிலையில் தனது கணவர் செந்தில்குமாருக்கு விடுப்புக் கோரி மனைவி வேம்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக அவர்  தாக்கல் செய்திருந்த மனுவில், இரு பிள்ளைகளின் படிப்பு செலவிற்கு நிதி ஆதாரம் திரட்டுவது சிரமமாக உள்ளதால், கணவரை விடுப்பில் அனுப்ப வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.

இந்நிலையில், ஆயுள் கைதி யான செந்தில்குமாருக்கு தனது பிள்ளைகளின் படிப்பு செலவிற்கு பணம் திரட்டுவதற்காக 28 நாட்கள் விடுப்பு வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. மேலும் கடலூர் முது நகர் காவல் நிலையத்தில் வாரம் ஒரு முறை கையெழுத்திட வேண் டும் என்றும்,  எந்தவித சட்ட விரோத செயல்களிலும் ஈடுபடக் கூடாது என்றும் உத்தர விட் டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *