ரூ.500 கோடி இழப்பீடு கேட்டு அண்ணாமலைக்கு தி.மு.க. தாக்கீது குற்றச்சாட்டுகளுக்கு அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும்

Viduthalai
3 Min Read

அரசியல்

சென்னை, ஏப். 17- தி.மு.க. மீதான குற்றச்சாட்டுகளுக்கு மன்னிப்பு கேட்பதுடன், ரூ.500 கோடி இழப்பீடு வழங்கா விட்டால் சிவில், கிரிமினல் வழக்குகள் தொடரப்படும் என்று தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு, தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் தாக்கீது அனுப்பப்பட்டுள்ளது.

தி.மு.க.வினர் 12 பேரின் சொத்து பட்டியல் என்று சில விவரங்களை தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை கடந்த 14ஆம் தேதி சென்னையில் வெளியிட்டார். இந்நிலையில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் தி.மு.க. எம்.பி. வில்சன் அண்ணாமலைக்கு தாக்கீது அனுப்பியுள்ளார்.

அதில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாட்டின் சிறந்த முதலமைச்சர் களில் ஒருவராக பரவலாக அங்கீகரிக் கப்பட்டுள்ளார். தமிழ்நாடு தேர்தல் களத்தில் நீங்களும், உங்கள் கட்சியும் முத்திரை பதிக்க முடியாத நிலையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர் கள், கட்சி உறுப்பினர்களின் நற்பெயரை களங்கப்படுத்தவும், அவதூறு செய்யவும் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறீர்கள். 

‘டிஎம்கே ஃபைல்ஸ்’ என்ற தலைப்பில் 15 நிமிடங்கள் ஓடும் காட்சிப் பதிவில் தி.மு.க. மீது தவறான, ஆதாரமற்ற, அவதூறான, கற்பனையான பல குற்றச் சாட்டுகளை கூறியுள்ளீர்கள்.

திமுகவின் சில சொத்து களின் மதிப்பை உயர்த்தி, சம்பந்தம் இல்லாத சொத்துகள் உள்ளிட்டவற்றின் மூலம் தி.மு.க.வுக்கு மொத்தம் ரூ.1,408.94 கோடி சொத்து இருப்பதாக பொய்யான குற்றச்சாட்டு சுமத்தப்பட் டுள்ளது.

வருமான வரித்துறை உள் ளிட்ட உரிய அதி காரிகளிடம் திமுகவின் சொத்து, கடன் விவரங்கள் தாக்கல் செய்யப் பட்டுள்ளன. சொத்து விவரங் களை மறைத்திருந்தால் அத்துறை நடவடிக்கை எடுத் திருக்கும்.

தி.மு.க.வினருக்கு சொந் தமான பள்ளிகளின் மதிப்பு ரூ.3,474.18 கோடி, கல்லூரிகள், பல்கலைக் கழகங்களின் மதிப்பு ரூ.34,184.71 கோடி என்பது பொய்யானது. ஒருவர் தி.மு.க. உறுப்பினர், நிர்வாகியாக இருந்தாலும், அவருக்கு சொந்தமான சொத்துகள், நிறுவனங்கள் கட்சியின் சொத்தாக மாறாது.

2018 மார்ச் முதல் 2022 வரை கட்சிகளுக்கு நிதியாக வழங்கப் பட்ட தேர்தல் பத்திரங்களின் மதிப்பு ரூ.9,208 கோடி. அதில், பாஜகவுக்கு மட்டுமே ரூ.5,270 கோடி சென்றுள்ளது. இதுவும் முறை கேடாக பெறப்பட்டது என்று கூறமுடியுமா? முதல்வர் பண மோசடியில் ஈடுபடவே துபாய் சென்றதாக, முற்றிலும் உண் மைக்கு புறம்பான குற்றச் சாட்டு கூறப்பட்டுள்ளது.

நோபல்  ஸ்டீல்  நிறுவனத்துடன் எந்த ஒப்பந்தமும் கையெழுத்திடப் படவில்லை. 2006_-2011 ஆட்சியில் அமைச் சராக இருந்த மு.க.ஸ்டா லின், சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்ட பணிகளுக்கான ஒப்பந்தத்தை ஒரு நிறுவனத் துக்கு அளிப்பதற்காக ரூ.200 கோடி பெற்றதாக ஆதாரமற்ற குற்றச் சாட்டு கூறியுள்ளீர்கள். 

அடுத்து ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க.வும் இத்திட்டத்தை தொடர்ந்தது. அன்றைய முதல மைச்சர் ஜெயலலிதா முன்னி லையில் இத்திட்டத்தை, ஒன்றிய அமைச்சராக இருந்த வெங்கய்ய நாயுடு தொடங்கி வைத்தார்.

பின்னர், இதன் விரிவாக் கத்தை அப்போதைய முதல மைச்சர் பழனிசாமி முன்னிலையில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

 தற்போது 2ஆம் கட்டப் பணிகளுக்கும் அதே நிறுவ னத்துக்கு ஒப்பந்தம் அளிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம், உங்கள் கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வும், பிரதமர் மோடி யும்  ஊழலில் ஈடுபட்டுள்ளதாக கூறுகிறீர்களா?

உங்கள் பேச்சு, குற்றச் சாட்டுகளுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

உங்கள் சமூக ஊடகப் பக்கங்கள், இணைய தளத்தில் இதுதொடர்பான காட்சிப் பதிவை நீக்க வேண்டும். 

இழப்பீட்டுத் தொகையாக ரூ.500 கோடி வழங்க வேண்டும். அது முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு செலுத்தப் படும்.

இந்தஅறிவிப்பு கிடைத்த 48 மணி நேரத்துக்குள் இவற்றை செய்ய தவறினால், உங்களுக்கு எதிராக சிவில், கிரிமினல் வழக்கு தொட ரப்படும். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *