புதுடில்லி, ஜூன்.31 வரவிருக்கும் ஒன்றிய பட்ஜெட்டில் போட்டித் தேர்வு பயிற்சி மய்யங்கள் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை (GST) 18 சதவீதத்திலிருந்து 5 சதவீத மாகக் குறைக்க வேண்டும் என்று இந்திய பயிற்சி மய்யங்களின் கூட்ட மைப்பு (CCAI) மத்திய அரசை வலியுறுத் தியுள்ளது.
இது தொடர்பாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமனை ஜனவரி 28-ஆம் தேதி நேரில் சந்தித்த கூட்டமைப்பின் நிர்வா கிகள், கோரிக்கை மனு ஒன்றை சமர்ப்பித் தனர். அந்த மனுவில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
வரி விலக்கு: பயிற்சி மய்யங்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியை 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும் அல்லது அதற்கு முழுமையாக வரி விலக்கு அளிக்க வேண்டும்.
உள்ளீட்டு வரி சலுகை இல்லாமை: உற்பத்தி அல்லது வர்த்தக நிறுவனங் களைப் போலன்றி, பயிற்சி மய்யங் களால் உள்ளீட்டு வரி சலுகை (Input Tax Credit) மூலம் வரியைச் சரிக்கட்ட முடிவதில்லை. இது கூடுதல் சுமையை ஏற்படுத்துகிறது.
பதிவு செய்யப்படாத மய்யங்கள்: அதிக வரி காரணமாக பல சிறிய பயிற்சி மய்யங்கள் பதிவு செய்யாமலேயே இயங்குகின்றன. குறைந்த கட்டணம் என்பதால் பெற்றோர்களும் அத்தகைய மய்யங்களையே நாடுகின்றனர்.
தற்போதுள்ள ரூ. 20 லட்சம் ஜிஎஸ்டி விலக்கு வரம்பு போதுமான தாக இல்லை. வாடகை, ஊதியம் மற்றும் இயக்கச் செலவுகள் அதி கரித்து வருவதால், இந்த வரம்பை ரூ. 1 கோடியாக உயர்த்த வேண்டும். பயிற்சி மய்யங்களின் நிதிச் சுமையைக் குறைப்பதன் மூலம் மாணவர்களுக்கான கல்விச் செலவு குறையும் என்றும், முறைசாரா கல்வி நிறுவனங்களை முறைப்படுத்த இது உதவும் என்றும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
