விமான விபத்தில் மகாராட்டிர துணை முதலமைச்சர் அஜித் பவார் உயிரிழப்பு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

கழகத்தின் சார்பில் இரங்கல்

மும்பை, ஜன.28 மகாராட்டிர மாநிலத்தின் துணை முதலமைச்சர் அஜித் பவார் (வயது 66) சென்ற விமானம் தரையிறங்கும்போது விபத்தில் சிக்கியது.

இன்று (28.1.2026) காலை 8.45 மணிக்கு பாராமதி விமான நிலையத்தில் அஜித் பவார் பயணித்த சிறிய ரக விமானம் தரையிறங்கும்போது விபத்தில் சிக்கித் தீப்பிடித்தது. தொழில்நுட்பக் கோளாறால் விமானத்தை அவசரமாக தரையிறக்கியபோது விபத்து எனத் தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் விமான விபத்தில் மகாராட்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

விமானம் கீழே விழுந்து நொறுங்கிய விபத்தில் அஜித் பவார் உள்பட 4 பயணிகளும், 2 விமானிகளும் உயிரிழந்தனர்.

கழகத் தலைவர் இரங்கல்

எதிர்பாராத விபத்தால் மகாராட்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித்பவாரின் மரணத்திற்கும், அவ்விபத்தில் மரணமடைந்தோருக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

– கி.வீரமணி,
தலைவர்
திராவிடர் கழகம்

28.1.2026  

சென்னை    

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *