திருவனந்தபுரம், ஜன.19 பீகாரை தொடர்ந்து 2 ஆம் கட்டமாக தமிழ்நாடு, கேரளா, சத்தீஷ்கர், கோவா, குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய 9 மாநிலங்களிலும், அந்தமான் நிக்கோபர் தீவுகள், லட்சத்தீவுகள், புதுச்சேரி ஆகிய 3 யூனியன் பிரதேசங்களிலும் அக்டோபர் 27 முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடந்து வருகிறது.
இந்நிலையில், கேரளாவில் எஸ்அய்ஆர் பணிகளுக்குப் பின் வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில், அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி ரத்தன் கேல்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் பெயர்கள் நீக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
2002 வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால், தற்போது எஸ்அய்ஆர் பணியின்போது பெயர் நீக்கம் செய்யப் பட்டுள்ளது.. இந்நிலையில் வாக்குச் சாவடி அதிகாரி முன்பு ஆஜராகி பெயரை சேர்க்க ரத்தன் கேல்கர் விண்ணப்பம் அளித்தார்.
