தி.மு.க.வுக்கு எதிராக பேசினேனா? பொய்யான ஆடியோ நிதியமைச்சர் பழனிவேல் ராஜன் மறுப்பு

2 Min Read

அரசு, தமிழ்நாடு

சென்னை, ஏப் 23  தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாக ராஜன், செய்தியாளர் ஒருவருடன் ஆங்கிலத்தில் உரையாடும் ஆடியோ ஒன்றை பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். ஆங்கில உரையாடலுக்கான தமிழ் மொழிபெயர்ப்பும் அந்த பதிவில் இடம்பெற்றிருந்தது. இந்த சூழலில் அது ‘போலியானது’ என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் கொடுத்துள்ளார். 

“உதயநிதியும், சபரீசனும் ஒரே ஆண்டில், அவர்களது மூதாதையரை விட அதிகமாக பணம் சம்பாதித் துள்ளனர். இப்போது அது பிரச்சினை யாகி வருகிறது. இதை எப்படி கையாள் வது? எப்படி மாட்டிக் கொள்ளாமல் இருப்பது? 10 கோடி, 20 கோடி என சிறுக சிறுக குவித்தது, அது தோராயமாக 30,000 கோடி ரூபாய் இருக்கும்” என்று அந்த ஆடியோவில் தெரிவிக்கப் படிருந்தது. இதற்கு பாஜக தரப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடம் விளக்கம் கேட்கப்பட்டது.இந்த சூழ லில் சர்ச்சைக்குள்ளான அந்த ஆடியோ குறித்து அறிவியல் பூர்வமான விளக்கம் கொடுத்துள்ளார் அமைச்சர் பழனி வேல் தியாகராஜன். 

அந்த ஆடியோ முழுக்க முழுக்க போலியானது என அவர் தெரிவித் துள்ளது வருமாறு:

“சமூக வலைதளத்தில் என் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு நான் எதிர்வினையாற்றுவதில்லை. எனக்கு அமைச்சரவையில் ஒதுக்கப்பட் டுள்ள இலாக்காவில் கவனம் செலுத் தும் வகையில் நான் ஈடுபட்டு வரு கிறேன். மார்ச் மாதம் முதல் பட்ஜெட் கூட்டத்தொடரில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறேன். என்னுடைய பொது வாழ்வில் நான் அடைந்த உயர் நிலைக்கு உரியவர் எனது தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் தான். எங்களை பிரிப்ப தற்கான எந்தவொரு நாச வேலையும் வெற்றி பெறாது.

 அந்த ஆடியோ முழுக்க முழுக்க போலியானது. அது போலி என்பதற் கான தொழில்நுட்ப ரீதியான ஆதார மும் உள்ளது” என அமைச்சர் பழனி வேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

26 நொடிகள் கொண்ட அந்த ஆடியோவில் முதல் சில நொடிகள் வேறொரு கிளிப்பில் இருந்து எடுத்தது எனவும். எஞ்சிய நொடிகளில் குரல் தெளிவாக இல்லை என்றும். வேண்டு மென்றே குரல் ஒலி குறைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இதில் தொலைபேசி அழைப் புக்கான ‘பேக்ரவுண்ட் நாய்ஸ்’ எதுவும் இல்லை என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *