காங்கிரஸ் ஆட்சியின் போது எடுக்கப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பை வெளியிட வேண்டும்: ராகுல்காந்தி

Viduthalai
1 Min Read

அரசியல், இந்தியா

பெங்களுரு, ஏப். 24- காங்கிரஸ் ஆட்சியின் போது எடுக்கப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பை வெளியிட வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். 

மே 10ஆம் தேதி நடைபெற வுள்ள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, கருநாடகாவில் பிரச் சாரம் மேற்கொண்ட ராகுல்காந்தி, “கருநாடகாவில் மொத்தமுள்ள 224 இடங்களில் காங்கிரஸ் 150 இடங்களைக் கைப்பற்றும். “40 சதவீத பாஜக அரசு” 40 இடங்களை மட்டுமே பெறும். பாரதிய ஜனதா அரசு தான் ஊழல் மிகுந்த அரசு, 40 சதவீதம் கமிஷன் வாங்கு கிறார்கள். இதே பணம்தான் முந்தைய அரசின் சட்டமன்ற உறுப்பினர்களை திருட பயன்படுத்தப்பட்டது. கோவா, மத்தியப் பிரதேசம், கருநாடகா, வடகிழக்கு மாநிலங்களில் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் பணத்தின் ஆதாரம் குறித்து பிரதமர் கூறுவாரா?

காங்கிரஸ் ஆட்சியின் போது எடுக்கப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பை வெளியிட வேண்டும். நாட்டினுடைய செல்வத்தை ஓபிசி பிரிவினருக்கு தர விரும்பாத காரணத் தினால் மட்டுமே இந்த ஜாதிவாரி கணக்கெடுப்பை பிரதமர் மோடி வெளியிடவில்லை.  நாட்டில் வெறுப்பு மற்றும் வன்முறைச் சூழலை உருவாக்கும் வகையில் பாஜக, ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் உள்ளது” எனக் கூறினார். 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *