தடித்த வார்த்தைகளால் சிக்கிக் கொண்ட ஒன்றிய பிஜேபி அமைச்சர்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

இந்தூர், ஜன.2 இந்தியாவின் தூய்மையான நகரம் என 8ஆவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தூரில், கழிவுநீர் கலந்த குடிநீரை பருகி தற்போதுவரை 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த உயிரிழப்புகள் தொடர்பாக மத்தியப்பிரதேச அமைச்சரும், அத்தொகுதியின் பாஜக சட்டமன்ற உறுப்பினருமான கைலாஷ் விஜயவர்க்கியாவிடம் ஆங்கில ஊடக செய்தியாளர் ஒருவர் ஒரு கேள்வியை முன்வைத்துள்ளார். அதற்கு பதிலளித்த ஒன்றிய அமைச்சர், Phokat prashn mat puchiye எனக் கூறியுள்ளார். அதாவது வீணான அல்லது பயன்றற கேள்விகளை கேட்காதீர்கள் எனக் கூறியுள்ளார். மேலும் “கண்டா” (ghanta) என்றும் கூறியுள்ளார்.

ஹிந்தியில் “கண்டா” என்ற சொல் பேச்சுவழக்கில் பயனற்றது, குப்பை, ஒன்றுமில்லை என்பதை குறிக்க பயன்படுத்தப்படுகிறது. சில வார்த்தைகள் பேசத் தடுமாறிய பிறகு, அந்த பாஜக அமைச்சர் கண்டா என்ற சொல்லை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு உடனே எதிர்ப்பு தெரிவித்து அமைச்சரை ஒழுங்காகப் பேசுமாறு பத்திரிக்கையாளர் கூறினார். இருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதம் தொடர்பான காட்சிப்பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பத்துபேர் செத்ததெலாம் ஒரு விசயமா? என்ற தொனியில் அவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்த தற்போது மன்னிப்பு கோரியுள்ளார் பாஜக அமைச்சர். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

“நானும் எனது குழுவினரும் கடந்த இரண்டு நாட்களாக உறக்கமின்றி பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலைமையைச் சீரமைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளோம். அசுத்தமான நீரினால் எனது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், சிலர் நம்மை விட்டு பிரிந்தும் சென்றுவிட்டனர். இந்த ஆழ்ந்த துயரமான நிலையில், ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் போது எனது வார்த்தைகள் தவறாக வெளிவந்துவிட்டன. இதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆனால், எனது மக்கள் முழுமையாகப் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் வரை நான் அமைதியாக இருக்க மாட்டேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *