கைப்பேசியில் இதை மாற்றினால் 3 ஆண்டு சிறை

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

கைப்பேசியில் இதை மாற்றினால் 3 ஆண்டு சிறை

கைப்பேசிகளில் 15 இலக்க IMEI நம்பர் உள்ளிட்ட அடையாளங்களை மாற்றுவது பிணையில் வெளிவர முடியாத குற்றம் என தொலைத்தொடர்புத் துறை(DoT) எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை மீறுவோருக்கு 3 ஆண்டுகள் சிறை (அ) ₹50 லட்சம் அபராதம் (அ) இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். இது தொடர்பாக செல்பேசி தயாரிப்பு நிறுவனங்கள், விற்பனை மய்யங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. பொதுமக்களும் இந்த விவகாரத்தில் எச்சரிக்கையாக இருங்கள்.

பேரிடர்களால் ரூ.10.77 லட்சம் கோடி இழப்பு

2025இல் இயற்கைப் பேரிடர்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தின. வெப்ப அலைகள், காட்டுத் தீ, வெள்ளம் ஆகியவையால் ₹10.77 லட்சம் கோடி மதிப்பில் சேதம் ஏற்பட்டதாக, காப்பீடு செய்யப்பட்ட இழப்பு மதிப்பீடுகளின் அடிப்படையில் தெரிய வந்துள்ளது. இந்த துயரங்களுக்கு, புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டால் ஏற்படும் காலநிலை மாற்றமே காரணம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். கலிபோர்னியா காட்டுத் தீயால் மட்டும் ₹5.38 லட்சம் கோடி இழப்பு.

வெளிநாடு சென்றாலும் த.வெ.க. திருந்தாதோ?

மலேசியாவில் நடைபெற்று வரும் ஜனநாயகன் படப் பாடல்கள் வெளியீட்டில் தவெக கொடியை காட்டிய ரசிகர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். திரைப்பட நிகழ்ச்சி என்பதால், அரசியல் சார்ந்த எந்த விசயங்களும் இடம்பெறக் கூடாது என மலேசிய காவல்துறையிர் கட்டுப்பாடு விதித்திருந்தது. இதனை மீறி நிகழ்ச்சியில் பலரும் தவெக, தவெக என முழக்கம் எழுப்பினர். இந்நிலையில், தவெக கொடியை அசைத்த ரசிகரை காவல்துறையினர் கைது செய்துள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *