முட்டுக்காடு படகு குழாமில் உணவகத்துடன் கூடிய மிதக்கும் கப்பல் அமைச்சர் ஆய்வு

1 Min Read

அரசியல்

சென்னை, ஏப்.28- சென்னை அடுத்த முட்டுக்காட்டில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு சொந்தமான படகு குழாமில் தனியார் பங்களிப்புடன் ரூ.5 கோடி மதிப்பில் 125 அடி நீளம், 25 அடி அகலத்தில் பிரமாண் டமான உணவகத்துடன் கூடிய இரண்டு அடுக்கு மிதக் கும் கப்பல் விடப்பட உள்ளது.

இதற்கான கட்டுமானப் பணி கடந்த மார்ச் 27ஆம் தேதி தொடங்கியது. இந்த கப்பல் கட்டுமானப் பணியை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு செய் தார். தொடர்ந்து, படூர் புறவழிச்சாலையில் உள்ள அர சுக்கு சொந்தமான 37 ஏக்கர் நிலத்தையும் அவர் ஆய்வு செய்தார். அந்த இடத்தில் சுற்றுலாத்துறை சார்பில் பூங்கா, நடைபாதை, விளையாட்டு மைதானம் அமைத்து முட்டுக்காடு படகுத்துறையுடன் இணைக்க வாய்ப்புள் ளதா எனவும் அதிகாரிகளுடன் விவாதித்தார். பிறகு, இதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப் படும். அதன் பின்னர் உரிய நிதி ஒதுக்கீடு செய்து செயல்படுத் தப்படும் என்று அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது திருப்போரூர் சட்ட மன்ற உறுப் பினர் எஸ்.எஸ்.பாலாஜி, ஒன்றியக்குழு தலைவர் இதய வர்மன், முட்டுக்காடு ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா மயில்வாகனன், முட்டுக்காடு படகு குழாம் உதவி மேலாளர் பாஸ்கரன், படூர் ஊராட்சி மன்ற தலைவர் தாரா சுதாகர் ஆகியோர் உடனிருந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *