திராவிட இயக்கம் இருக்கும் வரை நாகூர் ஹனிபாவின் குரல் ஒலிக்கும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

நாகப்பட்டினம், டிச.21  திராவிட இயக்கம் இருக்கும் வரை நாகூர் ஹனிபாவின் குரல் ஒலிக்கும் என்று அவரது நூற்றாண்டு விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டார்.

பிரபல பாடகரும், திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவருமான இசைமுரசு நாகூர் ஹனிபா நூற்றாண்டு விழா தமிழ்நாடு அரசு சார்பில் நாகையில் நேற்று (20.12.2025) நடைபெற்றது. தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு, விழா மலரை வெளியிட்டார்.

தொடர்ந்து, நாகூர் ஹனிபாவின் வாரிசுகள் நவ்ஷாத் அலி, நாஸர் அலி, நஸீமா பேகம், மும்தாஜ் பேகம் குடும்பத்தினர், ஜரீனா பேகம் குடும்பத்தினர் கவுரவிக்கப்பட்டனர். முன்னதாக, சில்லடி கடற்கரையில் நாகூர் ஹனிபா பெயரில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவையும் உதயநிதி திறந்து வைத்தார்.

விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: சென்னையில் வரும் 24-ஆம் தேதி நடைபெறும் இசைமுரசு நாகூர் ஹனிபா புத்தக வெளியீட்டு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் பங்கேற்கிறார். மறைந்த திமுக தலைவர் கலைஞர், நாகூர் ஹனிபா ஆகியோரது குரல்கள்தான் 75 ஆண்டுகளாக திமுக மேடையில் உச்சரிக்கப்பட்டு வருகின்றன. வக்ஃபு வாரியத் தலைவராக இருந்து இஸ்லாமிய மக்களுக்கு சேவை செய்தவர் நாகூர் ஹனிபா. அவரது காலடிச் சுவடுகள் இந்த மண்ணில் இருக்கும்வரை, அவரது குரல் காற்றில் கலந்துள்ள வரை, தமிழ்நாட்டில் ஹிந்தித் திணிப்பை பாஜக அரசு செய்யமுடியாது. இந்த மண்ணில் திராவிட இயக்கம், இஸ்லாமிய நெறி உள்ள வரைக்கும் நாகூர் ஹனிபாவின் குரல் ஒலிக்கும். இஸ்லாமிய மக்களுக்காக ஏராளமான திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தியுள்ளது. எனவே, திராவிட மாடல் அரசுக்கு இஸ்லாமியர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில், அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் முகமது ஷாநவாஸ், நாகைமாலி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலாளர் ராஜாராமன், மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், மீன் வளர்ச்சி கழகத் தலைவர் கவுதமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நாகப்பட்டினம், டிச.21  திராவிட இயக்கம் இருக்கும் வரை நாகூர் ஹனிபாவின் குரல் ஒலிக்கும் என்று அவரது நூற்றாண்டு விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டார்.

பிரபல பாடகரும், திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவருமான இசைமுரசு நாகூர் ஹனிபா நூற்றாண்டு விழா தமிழ்நாடு அரசு சார்பில் நாகையில் நேற்று (20.12.2025) நடைபெற்றது. தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு, விழா மலரை வெளியிட்டார்.

தொடர்ந்து, நாகூர் ஹனிபாவின் வாரிசுகள் நவ்ஷாத் அலி, நாஸர் அலி, நஸீமா பேகம், மும்தாஜ் பேகம் குடும்பத்தினர், ஜரீனா பேகம் குடும்பத்தினர் கவுரவிக்கப்பட்டனர். முன்னதாக, சில்லடி கடற்கரையில் நாகூர் ஹனிபா பெயரில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவையும் உதயநிதி திறந்து வைத்தார்.

விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: சென்னையில் வரும் 24-ஆம் தேதி நடைபெறும் இசைமுரசு நாகூர் ஹனிபா புத்தக வெளியீட்டு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் பங்கேற்கிறார். மறைந்த திமுக தலைவர் கலைஞர், நாகூர் ஹனிபா ஆகியோரது குரல்கள்தான் 75 ஆண்டுகளாக திமுக மேடையில் உச்சரிக்கப்பட்டு வருகின்றன. வக்ஃபு வாரியத் தலைவராக இருந்து இஸ்லாமிய மக்களுக்கு சேவை செய்தவர் நாகூர் ஹனிபா. அவரது காலடிச் சுவடுகள் இந்த மண்ணில் இருக்கும்வரை, அவரது குரல் காற்றில் கலந்துள்ள வரை, தமிழ்நாட்டில் ஹிந்தித் திணிப்பை பாஜக அரசு செய்யமுடியாது. இந்த மண்ணில் திராவிட இயக்கம், இஸ்லாமிய நெறி உள்ள வரைக்கும் நாகூர் ஹனிபாவின் குரல் ஒலிக்கும். இஸ்லாமிய மக்களுக்காக ஏராளமான திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தியுள்ளது. எனவே, திராவிட மாடல் அரசுக்கு இஸ்லாமியர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில், அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் முகமது ஷாநவாஸ், நாகைமாலி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலாளர் ராஜாராமன், மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், மீன் வளர்ச்சி கழகத் தலைவர் கவுதமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *