வரவேற்கத்தக்க சட்டம்! மதவாதம்: வெறுப்புப் பேச்சு – செயல்பாட்டுக்கு எதிராக கருநாடகத்தில் மசோதா நிறைவேற்றம்!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

பெங்களூரு, டிச.19 கருநாடக மாநில சட்டப்பேரவையில் காங்கிரஸ் அரசின் முக்கிய வாக்குறுதியான ‘வெறுப்புப் பேச்சு தடுப்பு மசோதா’ நேற்று (18.12.2025) குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது, சமூகத்தில் அமைதியைக் குலைக்கும் வகையில் பேசப்படும் வெறுப்புப் பேச்சுகளைத் தடுக்க தனிச் சட்டம் கொண்டு வரப்படும் என காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. அதன்படி, பெலகாவியில் நடை பெற்று வரும் குளிர்கால கூட்டத்தொடரில், கடந்த வாரம் உள்துறை அமைச்சர் டாக்டர் பரமேஸ்வர் இந்த மசோதாவைத் தாக்கல் செய்தார். இந்தச் சட்டத்தின் சாதக, பாதகங்களை விளக்கிய அமைச்சர், சமூக நல்லிணக்கத்தைப் பேண அனைத்து உறுப்பினர்களும் இதற்கு ஆதரவளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இந்த மசோதா மீதான விவாதம் சட்டப்பேர வையில் நடைபெற்றது. அப்போது பா.ஜ.வி.னர் இந்த மசோதாவிற்கு ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்தனர்.

குரல் வாக்கெடுப்பில் வெற்றி

எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், மசோதா மீது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உள்துறை அமைச்சர் பேரவைத் தலைவரிடம் கோரிக்கை வைத்தார். இதைத்தொடர்ந்து, பேரவைத் தலைவர் யு.டி.காதர் வாக்கெடுப்பை நடத்தினார். இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம், வெறுப்புப் பேச்சுகளைக் கட்டுப்படுத்துவதில் கர்நாடக அரசு அடுத்தகட்டத்திற்குச் சென்றுள்ளது. இருப்பினும், இது அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் விவா தங்களைக் கிளப்பியுள்ளது. கருநாடகாவில் பள்ளிகள், மசூதிகள் மற்றும் பிற மத விழாக்களின் போது ஹிந்து அமைப்புகள் வேண்டுமென்றே ‘ஜெய் சிறீராம்’ உள்ள பல வெறுப்ப சொற்களைக் கூறி கையில் கத்தி திரிசூலத்துடன் சென்று பதட்டத்தில் ஆழ்த்தும் நிகழ்வு தொடர்கதையாகி உள்ளது இதனால் சில இடங்களில் கலவரமும் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து காங்கிரஸ் தேர்தலில் பரப்புரை வெறுப்பு பேச்சுக்களை தடுக்க சட்டம் கொண்டுவருவோம் என்று வாக்குறுதி கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும். அதன்படி இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *