டில்லி காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துவதில் அரசு நிர்வாக அமைப்புகள் தோல்வி உச்சநீதிமன்றம்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, டிச.19- டில்லியில் காற்று மாசுப் பாட்டை கட்டுப்படுத்து வதில் அரசு நிர்வாக அமைப்புகள் தோல்வி அடைந்துவிட்டதாக உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது.

டில்லி காற்று மாசுபாடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், காற்று மாசுவால் கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் வேலையில்லாதவர்களுக்கு அரசு உதவி வழங்க உத்தர விட வேண்டும் என்று கோரினார்.

அதனைத் தொடர்ந்து காற்று மாசுபட்டால் சிறு வர்களும் முதியவர்களும் கடுமையாக பாதிக்கப்படுவ தாகவும் காற்று மாசு பாட்டை குறைக்க வேண்டுமெனில் தற்காலிக நடவடிக்கைகளை விட பரந்த, நீண்ட காலத் திட்டமிடல் தேவைப் படுவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

அரசு வழங்கும் உதவிகள் பாதிக்கப்பட் டுள்ள கட்டுமான தொழிலாளிகளுக்கு நேரடியாக கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். டில்லி காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துவதில் அரசு நிர்வாக அமைப்புகள் தோல்வி அடைந்து விட்டதாக கடுமையாக விமர்சித்த நீதிபதிகள், இவ்வாண்டைப் போல் அடுத்த ஆண்டும் காற்று மாசு ஏற்படலாம், அரசு, முன்கூட்டியே திட்டமிட வேண்டும் என்றும் சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் காத்திருப்பதை தடுக்க அக்டோபர் முதல் ஜனவரி வரை டில்லியை சுற்றி உள்ள சுங்கச் சாவடிகளை மூடலாம் என்றும் ஆலோசனை வழங்கினர்.

காற்று மாசை தடுப்பது குறித்து டில்லி மாநகராட்சி, டில்லி அரசு, காற்று தர மேலாண்மை ஆணையம் பதில் மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *