கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 16.12.2025

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* வி.பி-ஜி ராம்-ஜி மசோதா: பெயர் மாறும் 100 நாள் வேலை திட்டம்! காந்தி பெயர் நீக்கம்! நிதியை 90% லிருந்து.. 60% ஆக குறைகிறது! இந்த அம்சங்களை அடங்கிய புதிய மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பின் காரணமாக நேற்று அறிமுகப்படுத்தப்படவில்லை.

* ‘காந்தியடிகள் மீது வன்மம்’ – 100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* யுஜிசி, ஏஅய்சிடிஇ, என்சிடிஇ ஆகியவற்றை கலைத்து உயர்கல்விக்கு ஒரே ஆணையம்: ஒன்றிய அரசு கொண்டு வந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு; கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என மக்களவையில் முழக்கம். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக, இந்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்கு அரசு பரிந்துரைப்பதாக ஒன்றிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

தி இந்து:

* திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருக்கும் தூண், சமணர் காலத்தை சேர்ந்தது. அதேபோல் தூண்கள் மதுரையை சுற்றியுள்ள பல மலைகளில் உள்ளன. கார்த்திகை தீபம் ஏற்ற அந்த தூண்கள் பயன்படுத்தப்படவில்லை என உயர்நீதிமன்றத்தில் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

தி டெலிகிராப்:

* ‘இந்திய ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய சவால்’: கட்சித்தாவல் தடுப்புச் சட்ட சீர்திருத்தங்களுக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தல். மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கட்சித்தாவல் தடுப்புச் சட்டத்தில் சீர்திருத்தங்களுக்கு அழைப்பு விடுத்ததுடன், கட்டுப்பாடற்ற கட்சித் தாவல்கள் வாக்காளர்களால் வழங்கப்பட்ட ஆணையை அரித்து விடுகின்றன என்று எச்சரித்தனர்.

 – குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *