உண்மையின் பக்கம் நின்று பிரதமர் மோடி – ஆர்.எஸ்.எஸ். ஆட்சியை அகற்றுவோம்!! டில்லி பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி சூளுரை

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, டிச.15  மோடி- ஆர்​.எஸ்.​எஸ். ஆட்​சியை அகற்ற உண்மை மற்​றும் அகிம்சை வழி​யில் செயல்​படு​வோம் என்று ராகுல் காந்தி கூறி​னார்.

டில்லி ராம்​லீலா மைதானத்​தில் காங்​கிரஸ் கட்சி சார்​பில் ‘வாக்​குத் திருட்டு, பதவி வில​குங்​கள்’ முழக்கப் பொதுக்​கூட்​டம் நடை​பெற்​றது. இக்​கூட்​டத்​தில் காங்​கிரஸ் மூத்த தலைவரும் மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வரு​மான ராகுல் காந்​தி, தேர்​தல் ஆணை​யம் மீது கடும் தாக்​குதலை தொடுத்​தார். தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார், தேர்​தல் ஆணை​யர்​கள் சுக்​வீர் சிங் சாந்​து, விவேக் ஜோஷி ஆகியோர் பா.ஜ.க.​வுக்​காகப் பணிபுரிவ​தாகக் குற்​றம் சாட்​டி​னார்.

இக்​கூட்​டத்​தில் ராகுல் மேலும் பேசி​ய​தாவது:

நாங்​கள் உண்மையின் பக்​கம் நின்று பிரதமர் நரேந்​திர மோடி-ஆர்​.எஸ்.​எஸ். அரசை அதிகாரத்திலிருந்து அகற்​று​வோம். அவர்​களிடம் அதி​காரம் இருக்​கிறது, அவர்​கள் வாக்​குத் திருட்​டில் ஈடு​படு​கிறார்​கள்.

பீகார் மாநில சட்டப்பேரவை தேர்​தல் நேரத்​தில் பெண்​களுக்குப் பா.ஜ.க. அரசு தலா ரூ.10,000 பணப் பரிமாற்​றம் செய்​தது. ஆனால், தேர்​தல் ஆணை​யம் அவர்​கள் மீது எந்த நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்​லை. உண்​மைக்​கும், பொய்க்​கும் இடையி​லான இந்​தப் போரில் பா.ஜ.க. அரசுடன் இணைந்து தேர்​தல் ஆணையம் செயல்​படு​கிறது.

தேர்​தல் ஆணை​யர்​களுக்குப் பாது​காப்பு வழங்​கும் புதிய சட்​டத்தை பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்​துள்​ளார். நாங்​கள் இந்தச் சட்​டத்தை முன்​தே​தி​யிட்டு மாற்​று​வோம். தேர்​தல் ஆணை​யர்​கள் மீது நடவடிக்கை எடுப்​போம். இதற்குக் கால​தாமதம் ஆகலாம், ஆனால், இறு​தி​யில் உண்​மை​தான் வெல்லும். மோடியை​யும், அமித்ஷாவை​யும் தோற்​கடிக்க நாங்​கள் உண்மை மற்​றும் அகிம்சை வழியில் செயல்​படு​வோம்​.

இவ்​வாறு ராகுல்​ காந்​தி கூறி​னார்​.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *