தந்தை பெரியார் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளுக்கு கீழ் க்யூ ஆர் ஸ்கேன் வசதி துவக்கம்

Viduthalai
1 Min Read

அரசியல்

சென்னை, மே 3- தமிழ்நாடு அரசு செய்தித் துறையால் பராமரிக்கப் படும் நினைவகங்கள், சிலைகள் பற்றிய தகவல்களை 360 டிகிரி கோணத்தில் படமெடுத்து விரைவு துலங்கல் முறையில் (க்யூஆர் கோடு) பொதுமக்கள் பார்வை யிடும் வசதியை அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் நேற்று (2.5.2023) தொடங்கி வைத்தார்.

சட்டப்பேரவையில், கடந்த ஏப்.20ஆ-ம் தேதி செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பதி லளிக்கும் போது, ‘‘முதலமைச்சரின் அறிவுறுத்தல் படி, சிலைகளுக்கு அருகில் க்யூஆர் கோடு வைக்கப் பட்டு, அது செய் தித் துறையின் இணையதளத்தில் இணைக்கப் படும்.

அந்த க்யூஆர் கோடை ஸ்கேன் பண்ணினால், சிலையைப் பற்றிய முழு தகவல்கள் வரும். இப்பணிகள் ஒரு வாரத்தில் முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு கொண்டு வரப் படும்’’ என்று தெரிவித்தார். 

இந்நிலையில், இந்த வசதிநேற்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 360 டிகிரி கோணத்தில் படம்: சென்னை மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் உள்ள திரு வள்ளுவர் சிலை அருகில், செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் நினைவகங்கள், சிலைகளை 360 டிகிரி கோணத்தில் படமெடுத்து, விரைவு துலங்கல் குறியீடு (க்யூ ஆர்கோடு) மூலம் பொதுமக்கள் பார்வையிடும் வசதியை, விளை யாட்டுத் துறை அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார் அங்கு வைக்கப்பட்டுள்ள க்யூஆர் கோடை தனது கைபேசி யில் ஸ்கேன் செய்து, அதில் வரும் விவரங்களை பார்வையிட்டார். அப்போது, செய்தித்துறை அமைச் சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் செய்தித்துறை இயக்குநர் மோகன் ஆகியோர் அதைப் பற்றி விளக்கி னர்.

முதலில் திருவள்ளுவர் சிலை அதன்பின், அடுத்தடுத்து மற்ற சிலைகள் மற்றும் நினைவகங்களில் இந்த க்யூஆர் கோடு வசதி ஏற் படுத்தப்பட உள்ளது. இந்நிகழ்ச்சி யில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சட்டப்பேரவை உறுப்பினர் த.வேலு, மாநகராட்சி துணை மேயர் மு.மகேஷ்குமார், தமிழ் வளர்ச்சித் துறை செயலர் ஆர். செல்வராஜ் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *