சூரிய ஒளியில் மின் உற்பத்தி – செடி வளர்ப்பு

Viduthalai
1 Min Read

அரசியல்

நிலம் என்ற வளத்தை மறைத்துக்கொள்பவை சூரிய மின் பலகைகள். பகல் வெளிச்சத்தை மறைப்பதால், அதன் கீழே ஒன்றுமே செய்ய முடியாது என்பது தான் நிலைமை. அதை மாற்ற வருகிறது, பகுதி ஒளியை கீழே அனுப்பும் சூரிய மின் பலகைகள்.

அமெரிக்காவிலுள்ள, கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியிருக்கும் பசுமைக் குடிலில், சூரிய ஒளியை பாதி எடுத்துக் கொண்டு மீதியை கீழே உள்ள செடிகளுக்கு அனுப் புகிறது.

இதன் மூலம், செடிகள் முன்பை விட அதிக செழிப்பாக வளர்கின்றன என்பது தான் இதில் மிகவும் ஆச்சரியப்படத்தக்க தகவல்.

கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சூரியப் பலகைகளை கரிமப் பொருட்களால் தயாரித்தனர். வளைந்து கொடுக்கும் தன்மை கொண்ட, அவை பாதியளவு வெளிச்சத்தை வெளியேற்றும். இதை பசுமைக் குடிலில் பயன் படுத்தியபோது, கணிசமான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடிந்தது.

 அதைவிட, கீழே குடிலில் இருந்த செடிகள் அடர்த்தியாக வளர்ந்தன. செடிகளுக்கு அத்தனை சூரிய ஒளி தேவைப்படுவதில்லை என்பதோடு, கெடுதல் செய்யவும் வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த நுட்பத்தை வர்த்தகமயமாக்க முயற்சிகள் நடக்கின்றன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *