சென்னை, கலைவாணர் அரங்கில் நேற்று (3.5.2023) செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் பத்திரிகையாளர்கள் தங்கள் துறை சார்ந்த தொழிற்தகுதியை மேம்படுத்திக் கொள்வதற்கும், திறன்மேம்பாட்டை அதிகரிக்கவும், மொழித்திறன் மற்றும் நவீன தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கவும் “பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு பயிற்சியினை” செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்து உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் மரு.இரா. செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் த.மோகன், நீதியரசர் கே.சந்துரு (ஓய்வு), மேனாள் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன், தமிழ் இணைய கல்விக் கழக இணை இயக்குநர்ரெ.கோமகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் பத்திரிகையாளர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books