பா.ஜ.க. ஆட்சியின் ஊழல் கொள்கையே காரணம்
பிரியங்கா காந்தி தாக்கு
பெங்களூரு, மே 6- கருநாடகத்தில் பா.ஜ.க. அரசின் ஊழல் கொள்கை களால் அத்தியாவசியப் பொருட் களின் விலை உயர்ந்துவிட்டதாக பிரியங்கா காந்தி கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார்.
கருநாடக சட்டசபை தேர் தலையொட்டி அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கருநாடகத்தில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். மாநிலத்தின் மூலை முடுக்கெல்லாம் அவர் பயணித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டங் களில் கலந்து கொண்டு தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். கொப்பல் மாவட்டம் கனககிரியில் 4.5.2023 அன்று நடைபெற்ற கட்சியின் பிரசாரக் கூட்டத்தில் பிரியங்கா காந்தி கலந்து கொண்டு பேசியதாவது:- கருநாடகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை, விண்ணை தொட்டுள்ளது. சமை யல் எரிவாயு, அரிசி, பருப்புகள், மாவுகள் போன் றவற்றின் விலை உயர்ந்துவிட்டது. பா.ஜ.க. ஊழல் அரசின் ஊழல் கொள்கைகளால் விலைவாசி உயர்ந்துள்ளது. 40 சதவீத கமிஷன் பா.ஜ.க. அரசு என்று நாம் சொல்ல வில்லை. இந்த பெயரை ஒப்பந்த தாரர்கள் சங்கமே வழங்கியுள்ளது.
அரசுக்கு பெரிய அளவில் கமி ஷன் கொடுக்க முடியாத ஒப்பந்த தாரர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இங்குள்ள இளை ஞர்கள் கல்விக்காக அதிகளவில் செலவு செய்கிறார்கள். கல்வி பயின்று போட்டி தேர்வுக்கு செலவு செய்து படிக்கிறார்கள். காவல்துறை உதவி ஆய்வாளர் நியமன தேர்வில் முறைகேடு நடந்துள்ளது. பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் அந்த பணிக்காக லஞ்சம் வாங்கி யுள்ளனர். இதனால் தேர்வான பட்டியலையே இந்த அரசு ரத்து செய்துவிட்டது. பா.ஜ.க. சட்ட மன்ற உறுப்பினரின் மகன் வீட்டில் ரூ.8 கோடி சிக்கியது.
இவ்வாறு பிரியங்கா காந்தி பேசினார்.