கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 26.11.2025

1 Min Read

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* புதிய தொழிலாளர் சட்டம்: தொழிலாளர்களுக்கு விரோதமாகவும், முதலாளிகளுக்கு ஆதரவாக வும் உள்ளது.

* மே.வங்கத்தில் எஸ்அய்ஆரை கண்டித்து பேரணி; பாஜக ஆணையமானது தேர்தல் ஆணையம்: மம்தா கடும் தாக்கு

* எஸ்அய்ஆரை எதிர்த்து வைகோ வழக்கு: தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் அறிவிக்கை

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* வாக்குச் சாவடி நிலை அதிகாரிகளாக ஆர்.எஸ்.எஸ். – பாஜகவினர்: மத்தியப் பிரதேசத்தின் டாடியா மாவட்டத்தில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்புடைய பலர் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிரத் திருத்தத்திற்காக (SIR) க்காக வாக்குச் சாவடி நிலை அதிகாரிகளுக்கு உதவியாளர்களாக  (BLOS) நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு: “தற்செயலான தவறு” என்று விவரித்து பெயர்களை நீக்கியது நிர்வாகம்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* எல்லைப் பகுதிகளில் எஸ்அய்ஆர் மூலம் சிஏஏவை செயல்படுத்த பாஜக முயற்சிப்பதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா குற்றச்சாட்டு.

தி டெலிகிராப்:

* புதிய தொழிலாளர் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் மாவட்ட தலைமையகங்களில் தொழிற்சங்கங்கள் நடத்தும் ஆர்ப்பாட்டங்களில் விவசாயிகள் கூட்டணியான சம்யுக்த கிசான் மோர்ச்சாவின் துணை அமைப்புகள் கலந்து கொள்கிறார்கள்.

– குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *