கருநாடகத்தில் பாஜக ஆட்சியில்

1 Min Read

40% கமிஷன்: ஒப்பந்ததாரர்கள் பரபரப்பு அறிக்கை

அரசியல்

பெங்களூரு, மே 10  கருநாடகத்தில் பாஜக ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டதாக அரசு ஒப்பந்ததாரர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக ஒப்பந்ததாரர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பாஜக ஆட்சியில் அரசு ஒப்பந்தங்களுக்குப் பெறப்பட்ட 40% கமிஷனால் பல உயிர்கள் பறிபோய்விட்டன. கருநாடகத்தில் மக்கள் உயிருக்கு ஆபத்தான கட்டமைப்புகளில் வாழவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மக்கள் மனசாட்சிப்படி வாக்களித்தால் மட்டுமே ஜனநாயகம் மலரும். கருநாடகத்தில் பெருகிவிட்ட ஊழல் அனைவரது மனசாட்சியையும் காயப்படுத்தி இருக்கிறது. 

கருநாடக பாஜக அரசை ‘40% கமிஷன் அரசு’ என்று காங்கிரஸ் தொடர்ந்து விமர்சித்து வந்தது. தேர்தல் பிரச்சாரங்களிலும் பாஜகவுக்கு எதிரான முக்கிய விமர்சனங்களாக 40% கமிஷன் குற்றச்சாட்டு இடம்பெற்றது. 

இன்று (10.5.2023) கருநாடக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஒப்பந்ததாரர்கள் 40% கமிஷனை குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளதால் பாஜக அதிர்ச்சி அடைந்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *