வாக்காளர்களே, சிந்திப்பீர்!

1 Min Read

‘‘நம் நாட்டில் சகிப்புத்தன்மை கொண்ட முஸ்லிம்கள் எண்ணிக்கை  ஆயிரத்தைத்  தாண்டாது; அவர்களில் பலரும்கூட பொதுவாழ்வில் பதவிகளை அடைவதற்காகவே சகிப்புத்தன்மை என்ற முக மூடியை அணிகின்றனர். அவர்கள் ஓய்வு பெறும் போது தங்களின் சுயரூபத்தைக் காட்டும் வகையில் கருத்து தெரிவிக்கின்றனர்” என்று ஒன்றிய இணை அமைச்சர் சத்தியபாஸின் பாகல் கூறி யிருக்கிறார் 

ஒரு ஒன்றிய அமைச்சர் பேசுகின்ற பேச்சா இது? மதசார்பற்றத் தன்மைக்கு கட்டியம் கூற வேண்டிய ஓர் அமைச்சர், இப்படி ஒரு குறிப்பிட்ட மதத்தை தாக்கி இழிவுபடுத்திப் பேசலாமா?

பாபர் மசூதி வழிபாட்டுத்தலம் அல்ல, வெறும் கட்டடம் என்று பேசியவர் தானே ஜெகத் குரு என்று போற்றப்பட்ட காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி. 450 ஆண்டுகால வரலாறு படைத்த பாபர் மசூதியை இடித்தவர்கள் தானே இந்த பிஜேபி சங்பரிவார் கும்பல், ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் என்று பேசுகின்ற கட்சியைச் சேர்ந்தவர் வேறு எப்படித் தான் பேசுவார்?

சட்டமன்றத் தேர்தல் ஆனாலும், நாடாளுமன்றத் தேர்தல் ஆனாலும், கருநாடகத் தேர்தலில்  பி.ஜே.பி. வேட்பாளர்களில் ஒரே ஒரு முஸ்லிம் வேட்பாளர் உண்டா?

இதுதான் மதச்சார்பற்ற அரசா, கட்சியா? வாக்காளர்களே சிந்திப்பீர்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *