மக்கள் இனி விழித்துக் கொள்வார்கள் என நம்புகிறேன் : ப.சிதம்பரம்

Viduthalai
1 Min Read

இந்தியா, தமிழ்நாடு

சென்னை,மே14- கருநாடகத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைப்பது உறுதியாகியிருக்கும் நிலையில், நாட்டு மக்கள் இனி விழித்துக் கொள்வார்கள் என நம்புகிறேன் என மேனாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

கருநாடக சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி  அம்மாநிலத்தில் காங் கிரஸ் கட்சி ஆட்சியமைப்பது உறுதியாகியிருக்கிறது.

 கருநாடகத்தில் பெரும்பான்மை பலத்துடன் காங்கிரஸ் ஆட்சியமைப் பது உறுதியாகியிருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலை வர்களில் ஒருவரும், மேனாள் ஒன் றிய அமைச்சருமான ப.சிதம்பரம் கருநாடக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தாவது: கருநாடக மாநில வாக்காளர் களுக்கு என் அன்பான, உளமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

சட்டப்பேரவைத் தேர்தலில் மிகத் தெளிவான, ஆணித்தரமான தீர்ப்பைத் தந்த கருநாடக மக்களுக்கு இந்த நாடே கடமைப்பட்டிருக்கிறது, நன்றி சொல்கிறது.

இதனை ஒரு மாநில சட்டப் பேரவைத் தேர்தலாகப் பார்க்கக் கூடாது. இந்திய அரசியல் சாசனத் தின் உயர்ந்த நோக்கங்களைக் காப்பாற்றி நிலைநாட்டிய பெரும் போரில் வெற்றியடைந்தோம் என்று பெருமைப்படவேண்டும்.

கருநாடக மக்கள் பாஜகவின் இரட்டை இஞ்சின் அரசாங்கத்தின் பணபலத்தையும் வலிமையையும் எதிர்கொண்டுள்ளனர்.

பெரும்பான்மை மேலாதிக்கம், மதக்காழ்ப்புணர்வு, வெறுப்பு, வன் செயல் என்று சரிவுப் பாதையில் சென்று கொண்டிருந்த இந்திய நாட்டைத் தற்காத்து வெற்றி பெற்றிருக்கிறோம் என்று பள்ளுப் பாட வேண்டும்.

நமது மிகவும் முன்னேறிய மாநிலங்களில் ஒன்றான கருநாடகா, மீண்டும் முன்னேற்றத்தை நோக்கி பயணித்து, பொருளாதார வளர்ச்சி மற்றும் மனித வளர்ச்சிக் குறியீடு களில் முதல் இடத்தைப் பிடிக்கும்

வீர தீரத்துடன் போராடி வெற் றிக்கு பாடுபட்ட கருநாடக காங்கிரஸ் தொண்டர்களுக்கு எனது வாழ்த் துகள்.

மேலும், இனி நாட்டு மக்கள் விழித்துக் கொள்வார்கள் என்று உறு தியாக நம்புகிறேன் என்று சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *