தமிழ்நாட்டு மாணவர்கள் மேற்படிப்பு அமைச்சர் கோவி.செழியன் ஆஸ்திரேலிய அமைச்சருடன் ஆலோசனை

1 Min Read

சென்னை, நவ.1–   ஆஸ்திரேலிய பல்கலைக் கழகங்களில் தமிழக மாணவர் களின் மேற் படிப்பு வாய்ப்புகளை எளிதாக்குவது தொடர்பாக உயர் கல்வி அமைச்சர் கோவி.செழியனை சந்தித்து, ஆஸ்திரேலிய கல்வி அமைச்சர் டோனி புட்டி ஆலோசனை நடத்தினார்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு நேற்று (31.10.2025) வெளியிட்ட செய்தி க்குறிப்பில் கூறியிருப் பதாவது:  நவீன தொழில் நுட்பத்துக்கு ஏற்ப மாணவர்களை ஊக்கப் படுத்துவதுடன் மேலை நாடு களில் உள்ள உயர்தர கல்வியையும் தமிழ்நாட்டு மாணவர்கள் பயில வேண்டும் என்ற உன்னத நோக்கில் அரசு செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், மேற்கு ஆஸ்திரேலிய முதன்மை பல் கலைக்கழகங்களுடன் இணைந்து செயல்படுவதற் கான முன்னெடுப்புகளை தமிழ்நாட்டு அரசு மேற் கொண்டுள்ளது.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியனை, மேற்கு ஆஸ்திரேலியாவின் வர்த்தகம், பன்னாட்டு பல்கலைக் கழக கல்வி, குடியுரிமை மற்றும் பல்லின கலாச்சார நலன்கள் துறை அமைச்சர் டோனி புட்டி நேற்று (31.10.2025)சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பில், கல்வி ஒத்து ழைப்பை வலுப்படுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப் பட்டது. இதன் முக்கிய அம்சமாக, மேற்கு ஆஸ்திரேலியாவின் மேம்பட்ட பாடத்திட்டங் களை தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் அறிமுகம் செய்வது, தமிழ்நாட்டு மாணவர்கள் மேற்படிப்புக்காக மேற்கு ஆஸ் திரேலியா செல்வதற்கான வாய்ப்பு களை எளிதாக்குவது மற்றும் இருதரப்பு கல்வி பரி மாற்றத் திட்டங்களை செயல் படுத்துவது குறித்து விரிவான செயல் திட்டம் தயாரிக்கப் பட்டு அதை விரிவாக ஆய்வு செய்து முடிவெடுக்கலாம் என கருத்து தெரிவிக்கப்பட்டது.

இச்சந்திப்பின்போது, தமிழ்நாட்டு உயர்கல்வித் துறை செயலர் பொ.சங்கர், சென்னையில் உள்ள ஆஸ்திரேலிய துணைத் தூதர் சிளை ஜாக்கி, மேற்கு ஆஸ்திரேலிய வர்த்தக ஆணையர் இயன் மார்டின்ஸ் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனி ருந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *