இதுதான் பிஜேபியின் தார்மீகமோ! குஜராத் மருத்துவர் தற்கொலையில் பா.ஜ.க. எம்.பி. மீது வழக்கு

2 Min Read

காந்திநகர், மே 18 – குஜராத்தில் மருத்துவரை தற்கொலைக்குத் தூண்டியதாக அந்த மாநில பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேஷ் சுதாஷ்மா மற்றும் அவரின் தந்தை நரன்பாய் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அந்த மருத்துவர் தற்கொலை செய்து சுமார் 3 மாதங்களுக்குப் பிறகு இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் கைது நட வடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.

குஜராத்தின் விராவல் நகரைச் சேர்ந்த மருத்து வர் அதுல் சாக், கடந்த பிப்ரவரி 12-ஆம் தேதி தனது வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற் கொலை செய்து கொண்டார்.

அப்பகுதியில் மிகவும் பிரபலமான மருத்துவ ரான அதுல், தற்கொலைக்கு முன்பு பாஜக நாடாளு மன்ற உறுப்பினர் ராஜேஷ், அவரது தந்தை நரன் பாய் மீது குற்றஞ்சாட்டி குறிப்பு எழுதி இருந்தார். இது தொடர்பாக அவரது மகன் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

எனினும், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அவரின் தந்தை மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்யாமல் இருந்தனர். இதையடுத்து, காவல் துறையினருக்கு எதிராக மருத்துவரின் மகன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் கடந்த மாதம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் திடீரென பாஜக நாடாளுமன்ற உறுப்பினர். ராஜேஷ் மற்றும் அவரின் தந்தை மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தற்கொலை செய்து கொண்ட மருத்துவருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அவரின் தந் தைக்கு சுமார் 20 ஆண்டு கால பழக்கம் இருந்துள் ளது. மருத்துவரிடம் இருந்து பல்வேறு தவணை யாக, இருவரும் சுமார் ரூ.1.75 கோடி கடன் பெற்று உள்ளனர். பணத்தை திருப்பி அளிப்பதற்காக அளித்த காசோலைகள் வங்கியில் பணமில்லாத தால் திரும்பி வந்தது.

இது தொடர்பாக மருத்துவர் அதுல் அவர்களை தொடர்பு கொண்டபோது, பணத்தை தர மறுத்த துடன் கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படு கிறது. இதனால் விரக்தியடைந்த மருத்துவர் அதுல், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அவரின் தந்தை பணம் கொடுக்காமல் தன்னை ஏமாற்றியதை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *