குமரி மாவட்ட திராவிடர்கழகத்தின் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி

Viduthalai
1 Min Read

அரசியல்

கன்னியாகுமரியில் பெரியார் நகர் பெயர்ப் பலகை நீண்டகாலமாக இல்லாமல் இருந்தது. உடனே அங்கு பெயர்ப்பலகை அமைக்க வேண்டும் என்று குமரி மாவட்ட கழகம் சார்பாக மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிர மணியம், மாவட்டச் செயலாளர் 

கோ.வெற்றிவேந்தன் ஆகியோர் கன்னியா குமரி சிறப்பு நிலை  பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர். இது தொட‌ர்பாக நாகர்கோவிலில் உள்ள பேரூராட்சி உதவி இயக்குநர கத்திற்கு சென்று உதவி இயக்குநர் மற்றும் உதவி பொறியாளரை மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் கேட்டுக் கொண்டார்.

பேரூராட்சி மன்ற தலைவர் குமரி எஸ் .ஸ்டீபன், வார்டு உறுப்பினர். பூலோக ராஜன் முயற்சியில் பெயர்ப் பலகை புதுப்பிக்கப்பட்டது. இதனை மாவட்ட கழக தலைவர் மா.மு.சுப்பிர மணியம், மாவட்டச் செய லாளர் 

கோ.வெற்றிவேந்தன் , அகஸ்தீஸ் வரம் ஒன்றிய தலைவர் எஸ்.குமாரதாஸ், மாவட்ட மகளிர் பாசறை தலைவர் மஞ்சு குமாரதாஸ், கன்னியாகுமரி கிளைக் கழக அமைப் பாளர் க.யுவான்ஸ் ஆகியோர் பார்வை யிட்டு கன்னியாகுமரி பேரூராட்சி மன்றத் தலைவருக்கும், வார்டு உறுப்பி னருக்கும் நன்றி கூறினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *