இதுதான் பிஜேபி ஆட்சி!

1 Min Read

மராட்டிய மாநிலத்தில் நாள்தோறும்   70 பெண்கள் காணாமல் போகின்றனர்

அவுரங்காபாத், மே 20  மகாராட் டிராவில் தினமும் 70 பெண்கள் காணாமல் போவதாகவும், இதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சட்டப்பேரவை மேலவை எதிர்க்கட்சித் தலைவர் அம்பாதாஸ் தான்வே வலியுறுத்தி உள்ளார். சிவசேனா கட்சியின் (உத்தவ் பிரிவு) மூத்த தலைவரும் மகாராட்டிர சட்டப்பேரவை மேலவைத் தலைவருமான அம்பா தாஸ் தான்வே துணை முதல மைச்சர் (உள்துறை) தேவேந்திர பட்னா விஸுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது: மகா ராட்டிராவில் கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலத் தில் சிறுமிகள் உட்பட 5,510 பெண்கள் காணாமல் போய் உள் ளனர். இந்த எண்ணிக்கை மாதா மாதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சராசரியாக தினமும் 70 பெண்கள் காணாமல் போய் உள்ளனர்.

பெண்களுக்கான பாதுகாப்பு குறைவாக உள்ள மாநிலங்கள் பட்டியலில் மகாராட்டிராவும் இடம் பெற்றுள்ளது. எனவே, மாநிலம் முழுவதும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவை யான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மகாராட்டிர மகளிர் ஆணைய தலைவர் ருபாலி சகங்கர் சமீபத்தில், “காணாமல் போகும் பெண்களை கண்டுபிடிக்க ஒரு குழுவை அமைக்க வேண்டும்.

 இது தொடர்பாக 15 நாட்களுக்கு ஒரு முறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என மாநில அரசை வலியுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *