இந்திய வீடுகளில் ரூ.337 லட்சம் கோடி மதிப்பிலான நகைகள்

மும்பை, அக்.12-   தங்கம் விலை புதிய உச்சங்களைத் தொட்டுவரும் நிலையில், இந்திய வீடுகளில் உள்ள ஒட்டுமொத்த தங்க நகைகளின் மதிப்பு இதுவரை இல்லாத வகையில் 3.8 லட்சம் கோடி டாலராக (ரூ.337 லட்சம் கோடி) உயா்ந்துள்ளது.

இது குறித்து அண்மையில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்க ப்பட்டுள்ளதாவது: இந்திய குடும்பங்களில் பல தலைமுறைகளாக சேகரிக்கப்பட்டுள்ள தங்கத்தின் இருப்பு 34,600 டன்னாக மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது அந்தத் தங்க நகைகளின் மதிப்பு 3.8 லட்சம் கோடி டாலராக உள்ளது. அந்த வகையில் தங்கத்தின் விலை உயா்வு குடும்பங்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பை உயா்த்தியுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2023 ஜூலையில் வெளியிடப்பட்ட உலக தங்க கவுன்சில் அறிக்கையில், இந்திய வீடுகளில் தங்க நகைகளின் இருப்பு 25,000 டன்களாக மதிப்பிட்டது. அது தற்போது 34,600 டன்னாக உயா்ந்துள்ளது. உலக அளவில் தங்கம் வாங்கும் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா திகழ்வது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *