காஞ்சிபுரம் வடக்குப் பட்டு பகுதியில் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி தொடக்கம்

Viduthalai
2 Min Read

அரசியல்

காஞ்சிபுரம், மே 21 வாலாஜாபாத் அருகே உள்ள வடக்குப்பட்டு பகுதியில் 2ஆ-ம் கட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகளை தொடங்கினர் தொல்லியல் துறையினர்.   முதல் கட்ட அகழ்வாய்வில் கற்கால கருவிகளை தயார் செய்யும் இடமாக இப்பகுதி இருந்திருக்கலாம் என்பதற்கான சில சாத்தியக் கூறுக ளுடன் கூடிய பொருட்கள் கிடைத்தன. இதனை உறுதிப்படுத்துவதற்காக தற் போது 2-ஆம் கட்ட ஆய்வு தொடங்கி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரகடம் அடுத்துள்ள வடக்குப்பட்டு ஊராட்சியில் சென்னை தொல்லியல் துறை கண்காணிப்பாளர் காளிமுத்து தலைமையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரை அகழாய்வுப் பணிகள் நடந்தன.

 மூன்று மாதங்கள் நடந்த இந்த முதல்கட்ட தொல்லியல் ஆய்வில் தங்க அணிகலன்கள் உள்ளிட்ட பழங்கால வரலாறுகளை தெரிந்து கொள்ள உதவும் பல்வேறு தொல்லியல் முக்கி யத்துவம் வாய்ந்த பொருட்கள் கிடைத் தன. தொடர்ந்து நடந்த முதல் கட்ட ஆய்வில் பழங்கால கட்டட அமைப்பு ஒன்று இருந்தது தெரியவந்தது. கற்களை பயன்படுத்தி இந்தக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கட்டடம் பல்லவர் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று கருதுகின்றனர். இதனைச் சுற்றி தோண்டியபோது பழங்கால கல் மணிகள், கண்ணாடி மணி, எலும்பு, செப்புக் காசு, பானை யோடுகள், கண்ணாடிப் பொருட்கள் உள்ளிட்டவை கண்டெடுக்கப் பட்டன. இதனைத் தொடர்ந்து அகழ்வாய்வுப் பணிகளை தொடர்ந்து மேற்கொண்ட போது, ரோமானிய நாட்டில் தயாரிக் கப்பட்ட பானை ஓடுகளான ஆம் போரா ஓடுகள், ரவுலட் ஓடுகள், கருப்பு மற்றும் சிவப்பு நிற பானை ஓடுகள், வண்ணம் பூசிய பானை ஓடுகள் உட்பட பல்வேறு பொருள்கள் கிடைத்தன. மேலும் 0.8 கிராம் எடையுள்ள தங்க அணிகலன்கள் இரண்டும் கண்டெடுக் கப்பட்டன. இதையடுத்து முதல்கட்ட அகழாய்வில் கிடைந்த பொருள்களை வகைப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

மேலும் சிறிய இடத்தில் நடத் தப்பட்ட ஆய்வில் சுமார் 1000 முதல் 1200 பொருட்கள் கிடைத்துள்ளன. இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே இடத்தில் இவ்வளவு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது இங்குதான் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பழங்கற்கால கருவிகளை வைத்து பார்க்கும்போது கற்கால கருவிகளை செய்யும் தொழிற்கூடம் இங்கு இயங்கி இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கணிக்கின்றனர். இதனை உறுதிப்படுத்த மேலும் அகழ்வு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று ஆய்வாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சிக்கு தற்போது அனுமதி கிடைத்துள்ளது. இதனால் இந்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் மு.காளிமுத்து தலைமையில் இரண்டாம் கட்ட அக ழாய்வுப் பணிகள் தொடங்கியுள்ளன. இந்தப் பணிகள் தொடர்ந்து 3 முதல் 4 மாதங்கள் வரை நடைபெறும் எனத் தெரிகிறது. இந்த ஆய்வின் முடிவில் பல முக்கிய பொருள்களின் தகவல்கள் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *