சனீஸ்வர பகவான் சக்தி இதுதானோ! சனீஸ்வரன் கோவில் அர்ச்சகர் வீட்டிலேயே திருட்டு!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

காரைக்காலையடுத்த திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில். சனி தோஷத்தைக் கழிக்க இங்கே பக்தர்கள் வருவதுண்டு. இந்தக் கோவிலைப்பற்றி விதம் விதமாக, வண்ண வண்ணமாகக் கயிறு திரித்து தல புராணங்களை எழுதி வைத்துள்ளனர். ‘‘ஏழரை நாட்டு சனி பிடித்துவிட்டது, அதனால் பெரும் கஷ்டங்கள் வரும். இந்த சனீஸ்வரன் கோவிலுக்கு வந்து சடங்குகள் செய்து, குளத்தில் குளித்தால் தோஷம் போகும்” என்பது கொழுப்பெடுத்த மூடநம்பிக்கை.

ஆனால், என்ன நடந்தது?

அந்த சனீஸ்வர பகவான் கோவில் அர்ச்சகர் ரோகினி (வயது 60) வீட்டிலேயேஒன்பதரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள், ரூ.ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளைப் போயிற்று.

அந்தோ பரிதாபம்! 

அன்றாடம் சனிபகவானுக்குப் பூஜை செய்யும் அர்ச்சகருக்கே சனி பகவான் தன் ‘திருமுகத்தை’க் காட்டவில்லையே!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *