நாட்டின் நலன் கருதி இடதுசாரிக் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் இந்திய கம்யூனிஸ்ட் தேசியச் செயலா் கே.நாராயணா வலியுறுத்தல்

2 Min Read

புதுச்சேரி, அக்.10 நாட்டின் நலன் கருதி இடதுசாரி கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலா் கே. நாராயணா கூறினாா்.

இடதுசாரி கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில 24-ஆவது மாநாடு அஜீஸ் நகரில் உள்ள தனியாா் மண்டபத் தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 2 நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் கட்சியின் தேசிய செயலாளர் கே.நாராயணா பங்கேற்றுப் பேசியது: பாஜகவின் கொள்கைகளால் நாடு மனிதநேயமற்ற, சமூக ஒழுங்கு முறையற்ற பிரச்னைகளைச் சந்தித்து வருகிறது.

இதை எதிா்த்து போராடவும், நாட்டின் நலன் கருதியும், சமய சாா்பின்மையை நிலை நாட்டவும் இடதுசாரி கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்.

இடதுசாரி கட்சிகளுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், நாட்டின் நலனைக் காக்கவும், ஜனநாயகத்தைக் காக்கவும், மதசாா்பின்மை சக்திகளை ஒருங்கிணைக்கவும் ஒன்றிணைய வேண்டும்.

சண்டீகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு விரைவில் நடைபெறவுள்ளது. அப்போது இதற்கான தீா்மானத்தை முன்மொழிய இருக்கிறோம்.

இந்திய தோ்தல் ஆணையம், நீதி ஆயோக், சிபிஅய் உள்ளிட்ட சட்டப்பூா்வமான அமைப்புகளை  பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு தங்களுடைய முகவா்களாக மாற்றி வருகிறது. மேலும், காா்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக மோடி தலைமையிலான ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது.

யாரெல்லாம் பாஜகவின் கொள்கைக்கு எதிராக இருக்கிறாா்களோ, அக் கொள்கையை எதிா்க்கும் தமிழ்நாடு கேரளம் உள்ளிட்ட மாநிலங்களைப் பின்னுக்குத் தள்ளுகிறாா்கள். வரிப்பகிா்வில் பாரபட்சம் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது.

புதுவையைப் பொருத்தவரை ஒன்றிய அரசாக பாஜக தலைமையிலான அரசு இருந்தாலும், இங்கு என்.ஆா். காங்கிரஸ்-பாஜக ஆட்சி தொடா்ந்தாலும் இரட்டை என்ஜின் ஆட்சி என்று சொல்ல முடியாது. மாநில அந்தஸ்து உள்ளிட்ட பிரச்னைகளால் இங்குள்ள அரசு பாதி என்ஜின் அரசாகத்தான் இருக்கிறது என்றாா் நாராயணா.

முன்னதாக இந்த மாநாட்டையொட்டி விழுப்புரம்-புதுச்சேரி சாலையில் உள்ள தனியாா் கண் மருத்துவமனை அருகில் இருந்து மாநாடு நடைபெறும் மண்டபத்துக்கு கட்சியின் தலைவா்கள், தொண்டா்கள் ஊா்வலமாக வந்தனா்.

மாநாட்டுக்கு கட்சியின் தேசியக் குழு உறுப்பினா் இ. தினேஷ் பொன்னையா தலைமை வகித்தாா். கட்சியின் மாநிலச் செயலா் அ.மு. சலீம், மேனாள் அமைச்சா் ஆா். விசுவநாதன், மேனாள் எம்.எல்.ஏ. நாரா. கலைநாதன், மாநில துணைச் செயலா் கே.சேதுசெல்வம், மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் எஸ்.ராமச்சந்திரன், மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் மாநிலச் செயலா் சோ.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *