“தந்தை பெரியார் பிறந்த மண்ணில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி” – ஈரோடு மாவட்ட ஆட்சியர்

Viduthalai
3 Min Read

அரசியல்

ஈரோடு, மே 24 பொது மக்களின் குறைகளைத் தீர்த்து அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யப் பாடுபடுவேன் என ஈரோடு மாவட்ட புதிய ஆட்சியராகப் பொறுப்பேற்ற ராஜகோபால் சுங்கரா தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் புதிய ஆட்சியராக ராஜகோபால் சுங்கரா நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர்  ஈரோடு ஆட்சியர் அலுவலகத் திற்கு வந்து முறைப்படி ஆட்சியர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். பின்னர் ஆட்சியர் ராஜகோபால் சுங்கரா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, 

“ஈரோடு மாவட்ட ஆட்சியராக பணியாற்ற வாய்ப்பளித்த முதல மைச்சர்ருக்கும் வீட்டு வசதித் துறை அமைச்சருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தந்தை பெரியார் பிறந்த மண்ணில் ஈரோடு மாவட்ட ஆட்சியராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது மிக்க மகிழ்ச்சி. பொதுமக்கள் குறைகளை தீர்க் கவும், அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவும் முழுமையாக முயற்சி செய்வேன்.

தமிழ்நாடு அரசின் மக்கள் நலத் திட்டங்கள் கடைக்கோடி மக்களுக் கும் சென்றடையும் வகையில் செயல்படுவேன். ஈரோடு மாவட் டத்தின் முக்கிய தொழில்களான விவசாயம், நெசவு, தொழிற்சாலை வளர்ச்சிக்காக முழு அளவில் பாடுபடுவேன். பொதுமக்கள் தங் களது குறைகளை எந்த நேரமும் தெரிவிக்கலாம். இதற்காக 0424-2260211 என்ற தொலைப்பேசி எண்ணும், 97917 88852 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம்” எனக் கூறினார். 

தெலங்கானா மாநிலம் அய்த ராபாத் பகுதியை சேர்ந்தவர் ராஜ கோபால் சுங்கரா. 1990 ஆண்டு ஏப்ரல் 11-ஆம் தேதி பிறந்தவர். அய்அய்டி காரக்பூரில் பி.டெக் மற்றும் எம்.டெக் படிப்புகளை வேளாண், உணவு பொறியியல் பிரிவில் படித்து முடித்தவர். பின் னர் டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் எம்.ஏ. பொது நிர்வாகம் படித்துள்ளார். 2014-_2015-ஆம் ஆண்டில் நடந்த அய்ஏஎஸ் தேர்வில் 49 ஆவது இடம் பிடித்து அசத்தினார். பின் னர் 2015ஆம் ஆண்டு செப்டம்பரில் அய்ஏஎஸ் பணியில் பயிற்சி அதி காரியாக தமிழ்நாட்டில் பணியை துவக்கினார். 2016 ஜீன் மாதம் முதல் தூத்துக்குடி மாவட்டத்தில் பயிற்சி உதவி ஆட்சியராக பணி செய்தார். முசிறியில் 2 மாதங்கள் பயிற்சி அதிகாரியாக இருந்தார். 2017 ஜீலையில் கால்நடைத் துறை யில் உதவிச் செயலராக நியமிக் கப்பட்டார்.

2017ஆம் ஆண்டு அக்டோபரில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பத்மநாபபுரம் சார் ஆட்சியராக பணியாற்றினார். அப்போது ஏற் பட்ட ஒக்கி புயல் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார். 2018 ஆம் ஆண்டு குமரி மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக பெருஞ்சாணி அணை நிரம்பி, உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் வெள்ளத்தில் சூழப்பட்ட பளுகல், மாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் சிக்கிய பொதுமக்களை சார் ஆட்சியராக இருந்த ராஜாகோபால் சுங்கரா, கொட்டும் மழையில் இடுப்பளவு தண்ணீரில் சென்று பாதுகாப்பாக வெளியேற உதவி னார். அவரின் இந்த செயல் அனை வரது பாராட்டையும் பெற்றது. 2019-ஆம் ஆண்டு ஜனவரியில் தஞ்சாவூரில் கஜா புயல் நிவாரணப் பணியில் கூடுதல் திட்ட இயக்கு நராக நியமிக்கப்பட்டார். பின்னர் கடலூரில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரியாகவும், 2021 பிப்ர வரியில் தொழில் துறை துணைச் செயலாளராகவும் பணியாற்றினார். கடந்த மே மாதம் சென்னை மாநக ராட்சி தெற்கு மண்டல துணை ஆணையாளராக நியமிக்கப் பட்டார். இந்நிலையில் பேரிடர் மீட்புப் பணிகளில் அனுபவம் கொண்ட ராஜகோபால் சுங்கரா, கரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த கோவை மாநகராட்சி ஆணையாளராக பணியாற்றினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *