செங்கை மறைமலைநகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் திராவிடர் கழக மாநில மாநாட்டுக்காக மண்ணிவாக்கம், படப்பை பகுதிகளில் மாநாட்டை விளக்கி பொதுமக்களிடையே பரப்புரை நன்கொடை திரட்டல் பணியில் பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் மு. பசும்பொன் ஒருங்கிணைப்பில் தாம்பரம் மாவட்ட கழகத் தலைவர் முத்தையன் வழிகாட்டுதலில்,
தாம்பரம் மாவட்ட திராவிட மகளிர் பாசறை தலைவர் அருணா தலைமையில் கழக மகளிரணி மாநில துணைச் செயலாளர் இறைவி, நூர்ஜஹான், குணசேகரன், இசையின்பன், மோகன்ராஜ், அஜய் ஆகியோர் வர்த்தகர்களையும், பொது மக்களையும் சந்தித்து வசூலாக 20 ஆயிரம் ரூபாயை திரட்டினர்.