பயனுண்டா இந்தியாவில் இருப்பதாலே?

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

இந்தியாவில் இறுமாப்பு நீளுகின்றது

இந்திதானே வேண்டுமெனத் துடிக்கின்றது

இந்தியா என்றிங்கு நாடேயில்லை

இயம்புவதால் எவருக்கும் இலாபமில்லை

வந்துற்றப் பார்ப்பானே உயந்திருக்கான்

வாழ்ந்திட்ட நற்றமிழர் கீழிருக்கான்

இந்தமுறைதானே இருக்குத்தம்பி : இது

எவருக்கோ முன்னுரிமை இதனைநம்பி

முன்னுரிமை ஆர்.எஸ்.எஸ். பார்ப்பானுக்கே

முழுஉரிமை வேலைகளும் சொந்தமென்றால்

சிந்தனையில் தடித்தனமே உனக்கிருக்கு

சீர்மைபெற விரும்பாத மனக்கிறுக்கு

உந்தனையே நீஎண்ணிப் பார்க்கவில்லை

உரிமைகளைச் சொன்னாலும் ஏற்கவில்லை

 

மந்தப்புத்தி மடையனாக நீயிருந்தால்

மரியாதைக் கெட்டேதான் வாழவேண்டும்

உழைப்பெல்லாம் நீயேதான், ஆனால்

உருப்படியாய் ஏனில்லை? எண்ணிடுநீ

பிழைப்பெல்லாம் எவனுக்கோ சேர்க்கிறாயே

பின்னடைவாய் நீயேதான் இருக்கிறாயே!

தழைப்பது திராவிடத் தொன்மைதானே

தன்மானம் இல்லாது வாழலாமா?

சழக்கர்களின் திமிரடக்க எழுகவேண்டும்.

சரித்திரமாய் எல்லோரும் ஆகவேண்டும்

தந்திரமாய் பார்ப்பனரே ஆளுகின்றார்

தறுதலைகள் நாமெல்லாம் வாக்களித்து,

வந்திருக்கும் இடர்ப்பாடு அறியவில்லை

வழிவகைகள் சொன்னாலும் ஏற்கவில்லை

தந்தைபெரியாரும் இடித்துரைத்தார்; நம்

தமிழ்நாடு நமதென்று சொல்லிப்பார்த்தார்

சிந்தனைகள் பக்கத்தில் செல்லவில்லை

சிறப்போடு வாழ வழித்தெரியவில்லை

எத்தனைநாள் எல்லோரும் சொல்லவேண்டும்?

இதுவேதான் தமிழர் மாண்பா?

பித்தனைப்போல் இன்னுமா வாழலாகும்?

பிணிநீக்கி வாழவே மானமில்லையா?

எத்தர்களும் பித்தர்களும் வாழ்வதென்றால்,

எத்தனை ஆண்டாகும் வாழ்வுனக்கு?

பத்திரமாய் மனிதர்களாய் வாழ்கிறாயா?

பயனுண்டா இந்தியாவில் இருப்பதாலே?

– கவிஞர் ச. வெண்மணிஅழகன் க.மு;

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *