‘‘பெரியார்” உலகத்திற்கு ஒரே மருந்து

1 Min Read

பெரியார் உலகத்திற்கே ஒரே மருந்து பெரியாரின் கருத்துகள்தான்!

பெரியார் கூறுவது எல்லா மக்களுக்கும் பொருந்தும். ஒருவன் சுயமரியாதையோடு தன்மானத்தோடு வாழ எந்தக் கருத்து எவ்வளவு உதவுகின்றதோ, அதைப் பொறுத்துத்தான் அந்த மதிப்பு இருக்க வேண்டும்.

நம்முடைய வேதம், இதிகாசம், புராணங்கள், குரான், பைபிள் முதலியவற்றை மூட்டைகட்டி மூலையில் வைத்துவிடுங்கள்!

இவை எல்லாவற்றையும் விட உங்கள் சுய சிந்தனைப்படி நடவுங்கள், அதுதான் உங்களுக்கு வழிகாட்டும்!

இந்த உலக மக்களுக்கு தந்தை பெரியார் கொடுக்கும் புத்திமதியானது – மதம், மொழி, இனம், நிறம் முதலிய, மனிதனைப் பிரித்து வைக்கும். இவற்றை உடைத்து எறிய வேண்டும் என்று உலகிற்கு அறிவித்து உள்ளார். உலக மக்களின் கஷ்டத்திற்கு ஒரே மருந்து பெரியார் அவர்களின் கருத்துப் பிரச்சாரம்தான்.

– ஆந்திர நாத்திக அறிஞூர் கோரா,

‘விடுதலை’, 15.11.1972

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *