கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி!

Viduthalai
2 Min Read

தற்கொலை செய்த நண்பரின் 

உடல் மீது ஏறி பூஜை செய்த அகோரி

அரசியல்

சூலூர், மே 30 சூலூர் அருகே குரும்பபாளை யத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 32). ஆம்புலன்ஸ் ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். இவர் 8 ஆண்டுகளுக்கு முன்பு சரண்யா என்ப வரை காதலித்து திரு மணம் செய்து கொண் டார். இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. 

இந்த நிலையில் மணி கண்டனுக்கு, கோவை அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணியாளராக பணியாற்றும், பெண் ஒருவருடன் பழக்கம் ஏற் பட்டது. இதனால் அவர் தனது மனைவியை பிரிந்து அந்த பெண்ணு டன் வாழத் தொடங்கி விட்டார். இது தொடர் பாக மணிகண்டன் மனைவி காவல்  நிலையத் தில் புகார் அளித்தாலும், அவர் மனைவியுடன் செல்லாமல், அந்த பெண் ணுடனேயே வாழ்ந்து வந்தார்.

 கடந்த 27-ஆம் தேதி மணிகண்டனுக்கும், அவருடன் இருந்த பெண்ணுக்கும் குடும்பப் பிரச் சினை ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். 

இதையடுத்து உறவி னர்கள் அவரது உடலை எரியூட்டுவதற்காக சூலூர் மின் மயானத்திற்கு கொண்டு சென்றனர். இதற்கிடையே இறந்து போன மணிகண்டனுக்கு, திருச்சியை சேர்ந்த அகோரியான மணிகண் டன் என்பவர் நண்பராக இருந்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு மணி கண்டன் இறந்த தகவல் தெரிவிக்கப்பட் டது.

இதைக் கேள்விப்பட்ட தும் அதிர்ச்சியான அவர் உடனடியாக அங்கிருந்து தனது சீடர்களுடன் புறப்பட்டு கோவை சூலூ ருக்கு வந்தார். பின்னர் மின் மயானத்திற்கு வந்த அவர், இறந்து போன உடலுக்கு மரியாதைகள் செலுத்தி பூஜை செய்து வழிபாடு செய்தாராம். 

தொடர்ந்து இறந்த மணிகண்டன்     உடல் மீது அகோரி  ஏறி அமர்ந்து தியானம் செய் தாராம். இந்த பூஜைகள் அனைத்தும் நிறைவ டைந்ததும் மணிகண் டன் உடல் எரியூட்டப் பட்டது. 

இறந்து போனவரின் உடல் மீது ஏறி அமர்ந்து அகோரி பூஜை செய்த சம்பவம் இந்த பகுதி மக்களிடையே பெரும் அருவருப்பையும், குழப் பத்தையும் ஏற்படுத்தியது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *