தமிழ்நாடு மின் வாரியத்தில் 1,794 கள உதவியாளர் பணியிடம்: அக்.2 வரை விண்ணப்பிக்கலாம்

1 Min Read

மின் வாரியத்தில் காலியாக உள்ள 1,794 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை டிஎன்பிஎஸ்சி அறிவித் துள்ளது. இத்தேர்வுக்கு அக்டோபர் 2ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப் பட்டுள்ளது. எழுத்து தேர்வு நவம்பர் 16ம் தேதி நடக்கிறது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் லிமிடெட்டில் காலியாக உள்ள 1794 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற் கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு(தொழிற்பயிற்சி கிரேடு 2) உள்ள பதவிக்கான நேரடியாக நியமிக்கப்படுகின்றனர். இப்பதவிகளுக்கு வரும் அக்டோபர் 2ம் தேதி பிற்பகல் 11.59 மணி வரை இணைய வழியாக (www.tnpscexams.in) விண்ணப்பிக்கலாம். அதில், திருத்தங்களை அக்டோபர் 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை மேற்கொள்ளலாம்.எழுத்து தேர்வு நவம்பர் 16ம் தேதி நடக்கிறது. இப்பத விக்கு தொழிற்கல்வி மற்றும் பயிற்சிக்கான தேசிய குழுமத்தினால் வழங்கப்படும் ஏதேனும் ஒரு தொழிற்பிரிவில் தேசிய தொழிற்சான்றிதழ், தேசிய தொழிற் பழகுநர் சான்றிதழ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். மின் பணியாளர் அல்லது கம்பியாள் அல்லது சிறப்பு திட்டத்தின் கீழ் மின்னியல் தொழிற்பிரிவு படித்திருக்க வேண்டும். தேர்வுக்கான முழு விவரங்களை www.tnpscexams.inல் தெரிந்து கொள்ளலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறி வித்துள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *