இமாச்சலப் பிரதேசத்தில் இயற்கை சீற்றம்! மழை வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 366 பேர் பலி: ரூ.4,073 கோடி சேதம்

1 Min Read

சிம்லா, செப்.9- இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த இரண்டு மாதங்களாக பெய்த கனமழை, வெள்ளம், மற்றும் நிலச்சரிவுகளால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஜூன் 20 முதல் ஆகஸ்ட் 6 வரையிலான காலகட்டத்தில், மாநிலம் முழுவதும் ஏற்பட்ட இயற்கை சீற்றங்களால் 366 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், 203 பேர் மழை தொடர்பான நிகழ்வுகளிலும், 163 பேர் சாலை விபத்துக்களிலும் உயிரிழந்துள்
ளனர்.

நிலச்சரிவில் 42 பேரும், நீரில் மூழ்கி 34 பேரும், மேகவெடிப்பில் 17 பேரும், மரம் மற்றும் பாறைகள் விழுந்து 40 பேரும் உயிரிழந்துள்ளனர்.

அரசு சொத்துக்கள் ரூ.4,006 கோடியும், தனியார் சொத்துக்கள் ரூ.67 கோடியும் என மொத்தம் ரூ.4,073 கோடிக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

3,390 வீடுகள் மற்றும் 40 குடிசைகள் சேதமடைந்துள்ளன. 1,464 கால்நடைகளும், 26,955 பண்ணை பறவைகளும் உயிரிழந்துள்ளன.

சாலைகள், மின்சாரத் திட்டங்கள், நீர் விநியோக அமைப்புகள், பள்ளிகள், சுகாதார நிலையங்கள் மற்றும் விவசாய நிலங்கள் உள்ளிட்ட பல அத்தியாவசிய உட்கட்டமைப்புகள் இந்த மழையினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *