இலங்கையில் 1000 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்தது 15 பேர் பலி

1 Min Read

கொழும்பு, செப்.7– இலங்கையில் உள்ளூர்ச் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று தேயிலைத் தோட் டத்துக்கு அருகே சுமார் 1,000 அடி ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்; மேலும் 16 பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்து, நேற்று இரவு எல்லா (Ella) பகுதியில் நடந்து உள்ளது. பேருந்தில் பயணித்தவர்கள் குளிர்ந்த மலைப்பகுதிகளில் தங்களது விடுமுறையை முடித்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தவர்கள் என்று AFP செய்தி நிறு வனம் தெரிவித்துள்ளது.

முதற்கட்ட தகவல் களின்படி, பேருந்து மற்றொரு வாகனத்துடன் மோதியதால் கட்டுப் பாட்டை இழந்து, பாதுகாப்புத் தடுப்பை உடைத்துக் கொண்டு பள்ளத்தாக்கில் விழுந்து உள்ளது.

இலங்கையில் உள்ள வளைந்து நெளிந்த மலைச் சாலைகள் உலகின் மிகவும் ஆபத்தான பாதைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றன.

இலங் கையில், ஆண்டுதோறும் சராசரியாக 3,000 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *