வைஷ்ணவ தேவி சக்தி அவ்வளவுதான்! மீண்டும் நிலச்சரிவு – பக்தர்களின் பயணம் ஒன்பதாம் நாளாக நிறுத்தம்!

1 Min Read

சிறீநகர், செப்.4 காஷ்மீரில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டதால்  வைஷ்ணவி தேவி கோயில் பயணம்  9 ஆவது நாளாக நேற்றும் (3.9.2025) நிறத்தப்பட்டது. ஜம்மு காஷ்மீரில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள துடன் மலைப் பகு திகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. ரியாசி மாவட்டத்தில் உள்ள  வைஷ்ணவி தேவி கோயிலுக்குச் செல்லும் பாதையில் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 34 பக்தர்கள் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர். இதையடுத்து வைஷ்ணவி தேவி கோயிலுக்கான பயணம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.இடிபாடுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

இதனிடையே, காஷ்மீரில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக வைஷ்ணவி தேவி கோயிலின் சுத்ரா அடிவாரப் பகுதியில் 24 மணி நேரத்தில் 200 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. இதனால் சம் மர் பாய்ன்ட் பகுதியில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டதால், 9 ஆவது நாளாக நேற்றும் (3.9.2025) பயணம் நிறுத்தப்பட்டது. எனினும், நிலச் சரிவு ஏற்பட்டபோது பக்தர்கள் யாரும் இல்லாததால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *