வாக்குத் திருடர் யார்? வடமாநில மக்களிடம் கருத்து கேட்கும் ஊடகங்கள் கலக்கத்தில் பா.ஜ.க. – தேர்தல் ஆணையம்!

1 Min Read

பாட்னா, செப்.1 நாட்டில் “வாக்குத் திருட்டு”  என்பது முக்கிய விவகாரமாக உரு வெடுத்துள்ளது. பாஜக ஆதரவு “கோதி மீடியா” ஊடகங்கள் இந்த விவகாரத்தை மூடி மறைக்க முயற்சித்தாலும், ஒவ்வொரு நாளும் பாஜக – தேர்தல் ஆணைய கள்ளக் கூட்டணியின் வாக்கு திருட்டுச் சம்பவங்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகின்றன. இதனால் பாஜக – தேர்தல் ஆணையம் கலக்கத்தில் உள்ளது.

இந்நிலையில், “வாக்குத் திருடர் யார்?” என்ற கேள்விகளுடன் வடமாநில மக்களிடம், உள்ளூர் ஊடகங்கள் கருத்து கேட்கும் வேலையைத் தொடங்கியுள்ளன. “அல்ட்ரா சஸ்மா  (ultra chasma)” உள்ளிட்ட  ஹிந்தி உள்ளூர் ஊடகங்கள் பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களில் “வாக்குத் திருடர் யார்?”  என்ற கேள்வியை எழுப்பி வருகின்றன.

அல்ட்ரா சஸ்மா செய்தியாளர்கள் எழுப்பும் கேள்விக்கு வடமாநில மக்கள், “தேநீர் விற்பவர், சுற்றுலா செல்பவர், பத்திரிகையாளர் சந்திப்புக்கு வராதவர்” என  இரட்டை அர்த்தத்தில் பதில்  அளிக்கின்றனர்.

செய்தியாளர்கள் ‘புரியவில்லை’ என்று கூறும் போது மக்கள், ‘‘எங்களுக்கு மிரட்டல் வரும். கைது செய்யப்படுவோம். அதனால் கூற முடியாது” என்று கூறுகின்றனர். ஆனால் சிலர், “வாக்குத் திருடன் பிரதமர் மோடி தான்” என்று வெளிப்படையாக கூறி வருகின்றனர். இதுதொடர்பான காட்சிப் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனால்  பாஜக – தேர்தல் ஆணையம் பதற்றத்தில் உறைந்துள்ளன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *