பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி சார்பில் மாணவர்களுக்கு துண்டறிக்கை பிரச்சாரம்

1 Min Read

தருமபுரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி சார்பில் அரசு கலைக்கல்லூரி முன்பு மாணவர்களுக்கு ஒன்றிய பிஜேபி அரசு சமஸ்கிருதத்திற்கு ரூ.2533 கோடியும், தமிழ் உள்ளிட்ட அய்ந்து தென்னாட்டு மொழிகளுக்கு வெறும் ரூ.147 கோடி மட்டுமே ஒதுக்கி சூட்சுமத்தை செய்யும் பாஜக வின் அநீதியை மாணவர்களுக்கு துண்டறிக்கை வழங்கியும்,பிரச்சாரமும் செய்யப்பட்டது

சமஸ்கிருதத்திற்கு மட்டும் ரூ.2,533 கோடி!

தமிழ் உள்ளிட்ட அய்ந்து தென்னாட்டு மொழிகளுக்கு ரூ.147 கோடி மட்டுமே!

யாருக்குப் போகும் நிதி?

ஆர்.எஸ்.எஸ்.,பா.ஜ.க சூட்சுமத்தைப் புரிந்து கொள்வீர்!

என்கிற துண்டறிக்கை தலைமையிலிருந்து பகுத்தறிவாளர் கழகம் சார்பாக வாங்கப்பட்டு இளைஞரணியினரிடம் கொடுக்கப்பட்டது.

22-07-2025 அன்று மாலை தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கத்திற்கு வெளியே பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் கதிர்.செந்தில்குமார்,மாவட்ட செயலாளர் இர.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட அமைப்பாளர் தீ.அன்பரசு தலைமையில் துண்டறிக்கை கொடுக்க தொடங்கி வைத்தனர், உடன் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மா.செல்லதுரை, நகர இளைஞரணித் தலைவர் சண்.இராமச்சந்திரன் களத்தில் இருந்தனர்.

7.8.2025 அன்று அரசு கலைக்கல்லூரி முன்பு மதியம் 01:00 மணிக்கு மாணவர்களுக்கு துண்டறிக்கை வழங்கப்பட்டது, களத்தில் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மா.செல்லதுரை, நகர இளைஞரணித் தலைவர் சண்.இராமச்சந்திரன்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *