பிஜேபி ஆளும் ராஜஸ்தானில் கல்வி நிலை 86 ஆயிரம் வகுப்பறைகளை இழுத்து மூடியது

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ஜெய்ப்பூர், ஆக 25 பா.ஜ.க. ஆட்சி நடத்தும் ராஜஸ்தானில் அரசு பள்ளிகளில் உள்ள பாழடைந்த 86,000 வகுப்பறைகளை பயன்படுத்த தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டம் தங்கிபுரா காவல்நிலைய எல்லைக்குள்பட்ட பிப்லோட் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி கூரையின் ஒருபகுதி திடீரென இடிந்து விழுந்த விபத்தில் 7 மாணவர்கள் பலியாகினர். 8 மாணவர்கள் காயமடைந்தனர்.
இந்த துயர சம்பவத்தை தொடர்ந்து மாநிலத்தில் இயங்கும் பாழடைந்த பள்ளி கட்டடடங்கள் பற்றி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,’ ராஜஸ்தானில் 63,018 அரசுப் பள்ளிகளில் 5,26,162 வகுப்பறைகள் உள்ளன. இவற்றில் 86,934 வகுப்பறைகள் முழுவதும் பாழடைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே அரசுப் பள்ளிகளில் 86,000க்கும் மேற்பட்ட பாழடைந்த அறைகளை பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. அந்த அறைகளை பூட்டி வைக்க வேண்டும்’ என உத்தரவிடப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *