உள்நாட்டு விவகாரங்களை வெளிநாட்டில் பேசும் நடைமுறையை ஆரம்பித்தது நீங்கள்தான்!

Viduthalai
1 Min Read

ஜெய்சங்கர் கருத்துக்கு ஜெய்ராம் ரமேஷ் பதிலடி

புதுடில்லி, ஜூன் 9 காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் ராகுல் காந்தி, அண்மையில் அமெரிக் காவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, பிரதமர் மோடியை விமர்சித்திருந்தார். அதற்கு பதிலளித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர், “வெளிநாடு சுற்றுப்பயணங்களில் இந்தி யாவை விமர்சிப்பது ராகுலுக்கு பழக்கமாகிவிட்ட ஒன்று. தேர்தலில் ஒரு முறை ஒரு கட்சி வெல் வதும் மற்றொரு முறை வேறொரு கட்சி வெல்வதும் யதார்த்தமானது. உலகமே நம்மை கூர்ந்து கவனித்து வரும் வேளையில், உள்நாட்டு விவகாரங்களை அயல்நாட்டில் பேசுவது பண் பான மரபல்ல. இதன் மூலம் ராகுல் காந்தியின் நம்பகத்தன்மை வளராது”, என கூறியிருந்தார்.

மேலும், “2024 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் என்றும் அரசாங்கத்திற்கு எதிரான பொய் குற்றச் சாட்டுகள் அனைத்தும் இந்தியாவில் தயாரிக் கப்பட்டு, வெளிநாட்டு சக்திகளின் உதவிக்காக அங்கே சென்று விளம்பரப்படுத்தப்படுகிறது” எனவும் கூறினார். 

இந்த கருத்துகள் காங்கிரஸ் தலைவர்களை எரிச்சலடையச் செய்துள்ளது. 

இது குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள காங்கிரஸ் தலைவரும், மேனாள் சுற்றுச்சூழல் அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ், “உள்நாட்டு விவ காரங்களை வெளிநாட்டில் பேசும் நடை முறையை ஆரம்பித்தது உங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்கக் காரண

மாயிருந்தவர்தான். இதை தாங்கள் ஒத்துக்கொள்ள மறுத்தாலும் உண்மை அதுதான்”, என பிரதமர் மோடியை மறைமுகமாக சாடினார். 

மற்றொரு தலைவரான ரன்தீப் சுர்ஜேவாலா, “பா.ஜ.க. எழுதிக்கொடுத்த பழைய கதை-வசனத்தையே ஜெய்சங்கர் வாசிக்கிறார். அவர் வேறு புதுக் கதையை சொல்வது நல்லது. பிரதமர் மோடி, நாட்டின் 70 ஆண்டு கால வரலாற்றை எள்ளி நகையாடியிருக்கும் பொழுது, இந்திய அரசமைப்புக்கான ஆதார அமைப்பு களின் அழிவை குறித்து வெளிநாட்டில் ராகுல் கவலை தெரிவித்திருப்பது ஒன்றும் தவறல்ல” என கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *