புதுடில்லி, ஆக. 12- நாடு முழுவதும் நாய்க்கடி மற்றும் ரேபிஸ் காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது உச்சநீதிமன்றம். இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று (11.8.2025) விசாரணைக்கு வந்தது.
இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு உச்சநீதிமன்ற நீதிபதிகள்,”அனைத்துப் பகுதிகளில் இருந்தும் தெரு நாய்களை கொண்டுவந்து காப்பகங்களில் அடைக்க வேண்டும். தற்போதைக்கு, மற்ற விதி களை மறந்துவிடுங்கள். டில்லியின் அனைத் துப் பகுதிகளிலும் உடனடியாக நாய் காப்பகங்களை கட்ட வேண்டும். இந்த காப்ப கங்களில், நாய்களை கையாளக் கூடிய, கருத்தடை மற்றும் நோய்த்தடுப்பு மருந்துகளை வழங்கக் கூடிய நிபுணர் கள் இருக்க வேண் டும். எந்தக் காரணத் தைக் கொண்டும் இந்த நாய்களை வெளி யே விடக்கூடாது. நாய்கள் இந்த காப்ப கங்களில் இருந்து தப்பிக்க முடியாது என்பதை உறுதிப்படுத்த சிசிடிவி கேமராக் கள் அமைக்கப்பட வேண்டும். நாய்க்கடி சம்பவங்கள் குறித்து புகாரளிக்க ஒரு ஹெல்ப்லைனைத் தொடங்கவேண்டும். இதில் முக்கியமானது என்னவென்றால், ஒரு தெருநாய் கூட மீண்டும் விடுவிக்கப் படக் கூடாது. இது நடந்துள்ளது என்று எங்களுக்குத் தெரிந்தால், நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுப்போம்” என எச்சரிக்கை விடுத்தனர்.