தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தில் ஆய்வு முதுகலைப் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

1 Min Read

அரசியல்

சென்னை, ஜூன் 9– வரலாறு, தமிழ், சமூக அறிவியல் தொடர்புடைய துறைகளில் உதவித்தொகையுடன் ஓராண்டு ஆராய்ச்சி மேற்கொள்ள ஜூன் 30-க்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு ஆவண காப்பக ஆணையர் அறிவித்துள்ளார். 

இதுகுறித்து ஆணையர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு ஆவண காப்பத்தில் வரலாறு, சமூக அறிவியல், தமிழ் தொடர் புடைய துறைகளில் உதவித் தொகையுடன்கூடிய ஓராண்டு ஆராய்ச்சி மேற்கொள்ள முது கலை பட்டப்படிப்பு முடித்த கல் வியாளர்கள் விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ள முதுகலைப் பட்ட தாரிகள் ஆவண காப்பகத்தின் தொன்மையான ஆவணங்களை ஆய்வு செய்து, சமூகத்துக்கு பலன ளிக்கும் வகையில் தங்கள் ஆராய்ச் சியை மேம்படுத்தவும், தமிழ்நாட் டின் சமூகவரலாற்றை வெளிக் கொணர உதவுவதே இந்த திட்டத் தின் நோக்கமாகும்.  

விண்ணப்பத்தின் விவரங்கள் மற்றும் விண்ணப்படிவம் ஆகியவற்றை ‘www.tnarchives.tn.gov.in’  என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் அலுவலகத்துக்கு வரும் ஜூன் 30-ம் தேதி மாலை 5 மணிக்குள் வந்து சேர வேண்டும். 

இவ்வாறு தமிழ்நாடு ஆவண காப்பக ஆணையர் தெரிவித்து உள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *