மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக பா.ஜ.க. மேனாள் பொறுப்பாளர்! காங்கிரஸ் கட்சி கண்டனம்

1 Min Read

மும்பை, ஆக.6 மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக பா.ஜ.க.வைச் சேர்ந்த மேனாள் செய்தித் தொடர்பாளர் நியமிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி யுள்ளது.

கட்சித் தொடர்புடைய ஒருவரை நீதிபதியாக நிய மிப்பது, நீதித் துறையின் மீதான நம்பிக்கைக்கு ஏற்படுத்தும் அச்சுறுத்தல் என காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

ஜூலை 28 அன்று நடைபெற்ற உச்சநீதிமன்ற கொலீஜியம் கூட்டத்தில், அஜித் பகான்ராவ் கதேதங்கர், ஆர்த்தி அருண் சாத்தே மற்றும் சுஷில் கோதேஷ்வர் ஆகியோரை மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கும் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மகாராட்டிர அரசு செய்த பரிந்துரை யின்பேரில், இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது. இதில், ஆர்த்தி அருண் சாத்தே என்பவர் 2023 ஆம் ஆண்டு பாஜக செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஆதாரங்களை காங்கிரஸ் கட்சி வெளியிட்டு, கடும் எதிர்ப்புகளை தெரி வித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *