பாலியல் புகாருக்கு ஆளான நீதிபதிக்குப் பதவி உயர்வு: ‘நீதித்துறை தன்னையே தோற்கடித்துக் கொண்டது’ தலைமை நீதிபதிக்கு பெண் நீதிபதி கடிதம்!

2 Min Read

போபால், ஜூலை 31  மூத்த நீதிபதி செய்த பாலியல் துன்புறுத்தல் குறித்து கேள்வி எழுப்பிய மத்தியப் பிரதேச பெண் நீதிபதி திடீரென பதவி விலகியுள்ளார்.

தனக்குப் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட மூத்த நீதிபதி ஒருவர், உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதைக் கண்டித்து, அதிதி குமார் சர்மா என்ற பெண் சிவில் நீதிபதி பல சட்டப் போராட்டங்களை எதிர்கொண்டார். கடந்த 2023 ‘பணி செய்யும் திறனில் திருப்தியில்லை’ என மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தால் அதிதி குமார் சர்மா உள்ளிட்ட ஆறு பெண் நீதிபதிகள் பணிநீக்கம் செய்யப்பட்டார்கள்.  இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு

பின்னர் மத்தியப் பிரதேச உயர்நீதி மன்றம் நான்கு பெண் நீதிபதிகளை மீண்டும் பணியில் அமர்த்தியபோதும், அதிதி குமார் சர்மா, சரிதா சவுத்ரி ஆகியோரை பணியில் அமர்த்தாமல் நிராகரித்தது. இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், 2025 பிப்ரவரி மாதம் அதிதி குமார் சர்மாவின் பணிநீக்கம் சட்டவிரோதமானது மற்றும் தன்னிச்சையானது எனக் கண்டித்தும், அவரை மீண்டும் பணியில் அமர்த்த உத்தர விட்டும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.  இந்நிலையில் ஷாடோல் மாவட்ட சிவில் நீதிபதியாக இருந்த அதிதி குமார் சர்மா  தனது பதவியிலிருந்து விலகினார்.

இதுகுறித்து மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.  அந்தக் கடிதத்தில், ‘அளவுகடந்த அதிகாரம் கொண்ட மூத்த நீதிபதிக்கு எதிராக நான் பேசியதால், பல ஆண்டுகளாக தொடர் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டேன். நீதி கிடைக்காவிட்டாலும், என் தரப்பு வாதத்தையாவது கேட்பார்கள் என்ற நம்பிக்கையில் சட்டப்பூர்வமான அனைத்து வழிகளையும் பின்பற்றினேன். ஆனால், எனது துன்பத்திற்குக் காரணமானவர் விசாரிக்கப்படாமல், அவருக்கு வெகுமதி அளிக்கப்பட்டு பதவி உயர்வு பெற்றுள்ளார். அவருக்கு சம்மன் அனுப்புவதற்குப் பதிலாக கவுரவ பதவி வழங்கப்பட்டது.

எனவே, நான் இந்த நீதித்துறையில் தோற்கவில்லை,அமைப்புதான் என்னைத் தோற்கடித்துவிட்டது. நான் பழிவாங்கத் துடிக்கவில்லை, நீதிக்காகவே பேசினேன். எந்தவொரு பணி நியமனமோ, இழப்பீடோ, மன்னிப்போ ஆற்ற முடியாத காயங்களுடன் இங்கிருந்து செல்கிறேன். நீதிபதியாக அல்லாமல் பாதிக்கப்பட்ட ஒருவராக பணியில் இருந்து விலகுகிறேன். நீதித்துறை என்னைத் தோற்கடித்துவிட்டது என்பதை விட, அது தன்னையே தோற்கடித்துக்கொண்டது என்ற கசப்பான உண்மையுடன் மட்டுமே செல்கிறேன்’ என்று வேதனையுடன் அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *